கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more

பனியன்

பனியன், தி.வெ. இராசேந்திரன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ. பனியன் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல். சென்னை போன்ற பெருநகரத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எப்போதோ கிட்டிய உரிமைகள் – அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டஇ.எஸ்.ஐ., பி.எஃப், பிடித்தம் செய்வது போன்றவைகூட அப்போது திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, […]

Read more

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக். 264, விலை 140ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022419.html இன்றைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு உதவும் நூல். குழந்தைகளின் மனதில் எப்போதும் முன்னோர்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருந்தால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் மீது மரியாதை இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, தாங்களும் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதற்கான முயற்சிதான் […]

Read more

இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோயில்

செம்பியன்மாதேவி கலைக்கோயில், கோ. எழில் ஆதிரை, இயல், விலை 70ரூ. இன்றும் வாழும் மாதேவி! பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பு, உச்சரிக்கும்போதே உள்ளம் பரவசமடையும் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனின் மனைவியாக, உத்தம சோழனின் தாயாக, முதலாம் இராசராச சோழனின் பாட்டியாக, பராந்தகன், சுந்தரசோழனின், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசோழன், முதலாம் இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சிவரை இறைப் பணியிலும் கலைப்பணியிலும் ஈடுபட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்றவர் செம்பியன் மாதேவி. அவரின் முழு வாழ்க்கை […]

Read more

ஜென் தொடக்கநிலையினருக்கு

ஜென் தொடக்கநிலையினருக்கு, ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரன் ஜோசிபோவிச், விளக்கப்படங்கள் நவோமி ரோஸன் பிளாட், தமிழில் சேஷையா ரவி, அடையாளம் பதிப்பகம், பக். 162, விலை 160ரூ. நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே போகிறது எனும் மனக்குறை தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையினரிடம் வாசிப்பை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. தொடக்க நிலையினருக்கு எனும் அடிக்குறிப்போடு புத்தகங்கள் வெளிவருவது அந்த […]

Read more

வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, கோவை, விலை 100ரூ. மழையுடன் ஒரு பந்தம் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன. மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங்களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சடசடக்கின்றன. […]

Read more

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும், எர்னஸ்ட் ஹெமிங்வே, மொழிபெயர்ப்பு ச.து.சு.யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியாளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால் அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 224, விலை 170ரூ. பாட்டு திறத்தால் பாரதம் பேணியவர்கள் பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி. சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ. சேதுபதி. […]

Read more

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள், இரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு பதிப்பகம், பக். 62, விலை 65ரூ. தமிழ் கணினியியலில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? 1980களிலிருந்து இன்றுவரை கணிசமான முயற்சிகள் நடந்து உள்ளன. அந்த முயற்சிகளை கோடிட்டுக்காட்டி, இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இரா. பன்னிருகைவடிவேலன் எழுதிய இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பு. தமிழில் கணினியியல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கு, இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகள் விடைகளைத் தரும். கணினியில் தமிழ், இடைமுகத் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள், திறவூற்றுத் […]

Read more
1 2 3 4 8