கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, டி.வி. சந்திரசேகரன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 263, விலை 180ரூ. வங்கிகளில் வளர்ந்த தொழிற்சங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் இந்நூல். காலந்தோறும் தொழிற்சங்க இயக்கங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் நிலையான மகிழ்ச்சியைத் தந்தனவா என்பது கேள்விக்குறியே. இந்தப் பின்னணியில் நின்று, தமது 33 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கத்தின் ஈடுபாட்டு அனுபவத்தை, தன்னுணர்வு தலைதூக்காது, நடுநிலையோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை ஸ்டேட் வங்கி இயக்கத்தின் வரலாற்றோடு பகிர்ந்தளிப்பது சிறப்பு. ஸ்டேட் […]

Read more

பழனிமுருகன் வழிபாட்டில் காவடிகள்

பழனிமுருகன் வழிபாட்டில் காவடிகள், முனைவர் க. கிருஷ்ண மூர்த்தி, காவ்யா, பக். 258, விலை 230ரூ. முருகனுக்கு காணிக்கை குழந்தைகள்! தமிழனின் தொன்மைக் கலைகளில் ஒன்ற, காவடி ஆட்டம், குன்றின் மேல் நிற்கும் முருகனை வழிபட, பூஜைப்பொருட்களை காவடியில் கட்டிக் கொண்டும், காட்டு விலங்குகள் வராமலிருக்க ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்லும் காவடியின் கதையை, இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. சக்திமலை, சிவமலையை கட்டிக்காவடியாக இரு மலைகளையும் இடும்பன் பழனியில் தூக்கி வந்து, முதலில் தண்டாயுதபாணியை வணங்கி அருள் பெற்றான். காவடி தோன்றிய பழனியில் […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more

ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்

ஆலயங்களின் உட்பொருள் விளக்கம், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பாகம் விலை 260ரூ., இரண்டாம் பாகம் விலை 240ரூ. ஆலயங்களின் என்பது இந்து சமயத்தின் அஸ்திவாரமாகும். கோவில்களில் செய்யப்படும் அபிஷேகம், அர்க்கியம் போன்ற கிரிகைகளின் உண்மைத் தன்மை குறித்தும், தீப ஆராதனை, நைவேதனம் முதலியவற்றின் அவசியம் குறித்தும் இந்த நூலில் இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் எளிய முறையில் விளக்கியுள்ளார். கொடி மரத்தின் அறிகுறியும், விழாக்களின் காரணங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- சைவமும் […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி! ஐம்பெருங்காப்பியங்களில் பலரும் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம். வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம், புதுமைக் காப்பியம் என்றெல்லாம் பலரும் அந்த காப்பியத்தை பாராட்டி உள்ளனர். அந்த காப்பியத்தின் தலைவி கண்ணகியை, தெய்வமாக வழிபடும் வழக்கம், அது தொடர்பான பல்வேறு தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சைவ சமயத்தை புனருத்தாரணம் செய்த, யாழ்பாணத்து ஆறுமுக நாவலர், சிறுதெய்வ வழிபாடுகளை, கடுமையாக கண்டித்தவர். இலங்கையில் நிலவி வரும் […]

Read more

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ. தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 110ரூ. கன்னடத்தில் பிரபல எழுத்தாளரான வைதேகி படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இதிலுள்ள எல்லாக் கதைகளிலும் ஆண், பெண் இணைந்த உலகமொன்று உள்ளது. அந்த உலகத்தில் பிரிதலும் உண்டு, சுவாரசியமான பேச்சு மட்டுமின்றி, துன்பத்தின் வரிகளும் இழையோடுகிறது. சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாலும், அதனூடே துக்கத்தின் சாயலும் படிந்துள்ளது. மனதைத் தொடும் இச்சிறுகதை தொகுப்பு நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழாக்கம் ஜெயந்தி. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more
1 2 3 4 9