கருணாமூர்த்தி

கருணாமூர்த்தி, கவி. சுகரத்னம், கிரி டிரேடிங் ஏஜென்சி, சென்னை, விலை 75ரூ. காஞ்சி மகாப்பெரியவரின் வாழ்க்கை வரலாறு வசன கவிதையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் கவி. சுகரத்னம். விலை 75ரு. கிரி பதிப்பகத்தார் மேலும் சில ஆன்மிக நூல்களை வெளியிட்டுள்ளனர். விதியை வெல்லும் வழிமுறைகள் ஆசிரியர் சிவ.சிதம்பரம். விலை 20ரூ. இருள் நீக்கி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளிக்கும் சந்தேக விளக்கங்கள். தொகுத்தவர் ஆர். கரிகாலன். விலை 95ரூ. பிரார்த்தனா ஸங்க்ரஹம், நித்யா பாராயணத்துக்குரிய சின்னச் சின்ன சுலோகங்கள். மொழிபெயர்ப்பு கீதாராணி. விலை 50ரூ. ஸ்ரீ […]

Read more

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ. […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இது புதுமாரியான புதினம். இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் வதனா. இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இறுதியில் சென்று வா உறவே சென்று வா என்று காதலிக்கு விடை கொடுக்கும் தமிழமுதன் கண்ணீரோடு பிரிந்துவிடுகிறான். இந்தக் காதல் தொடரில் இலக்கியம், அறிவியல், பொதுவுடமை, தத்துவம், புராணம், வரலாறு என பல செய்திகளையும் கவிஞர் தியாரூ கலந்து கொடுத்திருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. காதலைப் பற்றி நிறைய கதைகள் வெளியாகி இருக்கலாம். […]

Read more

ஜீவாவின் சமுதாயத் தொண்டு

ஜீவாவின் சமுதாயத் தொண்டு, த. காமாட்சி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ப. ஜீவானந்தம். ஏழை, பாட்டாளி மக்களின் தலைவர் அவர். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சாதிமுறையைச் சாடியவர். சிறந்த காந்தியவாதி. பொதுவுடைமைவாதி. தொழிலாளர்களின் உண்மைத்தலைவர். த. காமாட்சியின் ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஜீவா ஆற்றிய தொண்டு, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு, கம்யூனிச கோட்பாட்டில் அவரது உறுதிப்பாடு ஆகிய கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

Read more

எங்கே எதற்காக

எங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக்பேலஸ் பி.லிட், பக். 182, விலை 150ரூ. தமிழில் ஒரு யதார்த்த சினிமாவை உருவாக்கி வெற்றிபெற்றவர் இயக்குனர் ஜெயபாரதி. அவரின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு இந்நூல். தன் பள்ளிப்பருவம் முதல் இன்று வரை நாடகம், சினிமா என்று இவர் இயங்கி வந்த அனுபவங்கள் ஒரு திரைப்படம்போல் விரிகிறது. சத்யஜித்ரே, மிருனாள் சென் உள்ளிட்ட மேதைகளின் தாக்கம் இதுவரை சினிமாவுக்குள் இழுத்துப்போட்டது சுவாரஸ்யம். பாலசந்தரின் மூன்று முடிச்சு, பட்டினப்பிரவேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்க வேண்டியவர். […]

Read more

இயன்றவரையில் இனிய தமிழ்

இயன்றவரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்தமிழ் மன்றம், பக். 128, விலை 60ரூ. செம்மொழி என்ற பெருமையும் பகழும் தமிழ்மொழிக்கு இருந்தாலும் தமிழர்கள் பேசும்போது, தேவையே இல்லை என்றபோதும் பிறமொழிகளைக் கலந்து பேசுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பெருகிவிட்டது. இது தமிழ்மொழிக்குச் செய்யும் பெரும் தீங்கு என்பதையே இந்நூலாசிரியர் நூல் முழுதும் அலசியுள்ளார். தக்க உதாரணங்கள் தந்து, அதற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் வழங்கி தமிழுக்கு உரமூட்டுகிறார். தமிழின் பெருமையை இனிமையை எடுத்து இயம்புகிறார். இயன்றவரை […]

Read more

பாரதப் பெருமகன், டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, பக். 212, விலை 120ரூ. அகன்ற சென்னை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்த முதல் தமிழர் என்ற பெருமையுடைய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி மாநில ஆளுநர் வரையான அவர் வகித்த பதவிகள், அவரது முன்னோர் பற்றிய வரலாறும் அவரது குமரமங்கலம் இன்றைய தலைமுறை வரையான வரலாறும் கணக்கிடைக்கும் நூல். டாக்டர் சுப்பராயனின் கல்வி, அவர் வகித்த பதவிகளை […]

Read more

ஈரம்

ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும்

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும், முனைவர் ஏ. லாரன்ஸ்மேரி, ரா.செ. துரைராஜ் நாடார் நூற்றாண்டு விழா குழு வெளியீடு, நாகர்கோவில், விலை 100ரூ. தமிழக எல்லைப் பகுதிகளை, தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு குறித்து பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்த நூலில் முனைவர் ஏ.லாரன்ஸ் மேரி ஆராய்ந்து எழுதியுள்ளார். பல நூல்களில் இருந்து குறிப்புகளைத் திரட்டியும், குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் செய்திகளைச் சேகரித்தும் எழுதப்பட்ட இந்த […]

Read more
1 5 6 7 8