பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ. மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான்

லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான், ஆங்கிலம் அனிஸ் சாஸ்திரி, பவான் சவுத்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ் பப்ளிகேஷன்ஸ், பக். 372, விலை 245ரூ. இந்தியாவின் பிரதமமந்திரியாகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரியின் தேவைகள் மிகவும் குறைவு. தன்னுடைய ருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னிடம் எப்போதாவது உபரிநிதி ஆதாரங்கள் இருந்தால், அதை தேவைப்பட்டோருக்கு உதவும் வகையில் மீண்டும் சமுதாயத்திடமே சேர்ப்பதில் முனைப்பாக இருந்தார் என்பதை இந்த நூல் வாயிலாக அறிய முடிகிறது. இத்தனை […]

Read more

உறவுகள்

உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு! மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

பாலகுமாரனின் முகநூல் பக்கம்

பாலகுமாரனின் முகநூல் பக்கம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. முகநூலில் முன் தகவலாக பதிவு செய்த விசயங்களை தொகுத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன். “உள்ளே கிடப்பது பற்றி அறிவீரோ? நான் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் எந்த செயலும் செய்யாது. இந்த நிலை எப்படி வரும். உள்ளே உள் மனதை உற்று பார்த்தபடி இரு. முதலில் திணறும். மனம் ஓடும். இழுத்து நிறுத்த வேணும். ஏதோ ஒரு சமயம் மனம் வசப்படும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிரு. இது முக்கியம். மனம் கவனிக்க […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ. அவ்வையார் எழுதிய ஆத்திசூடி நூலுக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னுடைய புதிய படைப்பை கொடுத்தவர் பாரதியார். அந்த புத்தகத்துக்கு இன்னும் மெருகேற்றி எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை) என்ற தலைப்பில் முனைவர் நா. சங்கரராமன் ஒரு புதிய நூல் வெளியிட்டு உள்ளார். இதில் ‘நம் உயர்வான எண்ணங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ போன்ற உயரிய கருத்துகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக நேர்த்தியாக உரை எழுதி இருக்கிறார். அச்சம் […]

Read more

கிருதயுகம்

கிருதயுகம், பேராசிரியர் ந. வேலுசாமி, விலை 250ரூ. சேலம், நாமக்கல் பகுதியில் வாழும் ஒரு சமூகத்தினரின் கலாச்சாரம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார், பேராசிரியர் ந. வேலுசாமி. வட்டார வழக்கில் எழுதுவது கடினம். அதை வெகு இயல்பாக எழுதியுள்ளார். ஆசரியருக்கு இது முதல் நாவல் என்பதை நம்ம முடியவில்லை. நிறைய நாவல்கள் எழுதி பக்குவப்பட்டவரின் படைப்பு என்று சொல்லத்தக்க வகையில் நாவல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- ஸ்ரீகந்தபுராணம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. […]

Read more

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பு காவ்யா சு. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 900ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் முதல் முறையாக முழு அளவில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தமிழரின் சமயநெறி, தமிழரசு கழகம் ஏன் வந்தது? சீறாப்புராண சொற்பொழிவுகள், வள்ளல் சீதக்காதி வரலாறு, பத்ர் போரின் பின் விளைவுகள் மாதம் இருமுறை வெளியான ‘ஒளி’ தலையங்கங்கள் […]

Read more

நகைச்சுவை மன்னர் கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலைவாணர், முனைவர் இராம. இராமகுமார், செம்மூதாய் பதிப்பகம், விலை 60ரூ. கலைவாணர் என்றால், அது என்.எஸ். கிருஷ்ணன் ஒருவரையே குறிக்கும். உலகப் புகழ் பெற்ற மேல் நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு இணையானவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர். ஓடாத படங்களையும் ஓட வைத்தவர். பிற்காலத்தில் போதிய வருமானம் இல்லாத காலத்திலும், கையில் இருப்பதை தானமாக வழங்கிய வள்ளல். அத்தகைய உயர்ந்த மனிதரான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறை, சரளமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார், முனைவர் இராம.இராமகுமார். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 2 3 4 5 8