யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ்

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112. ஒரு புகைப்படக் கலைஞர் பயணக்கட்டுரை எழுதுவதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வது. இரண்டு அதன் உண்மைத்தன்மையைப் புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துவது. அதைத்தான் ஸ்ரீஹரி தன்னடைய ஜெர்மன், சுவிட்சர்லாந்து அனுபவங்களை புகைப்படக்காரர் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருக்கிறார். மதர்தெரஸா உள்ளிட்ட பலரின் பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது. வளர்ந்துவரும் […]

Read more

காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு, பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 288, விலை 240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-925-9.html சர்வதேச சமூகத் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150. சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக […]

Read more

ஏழாம் பாவம்(களத்திர பாவம்)

ஏழாம் பாவம்(களத்திர பாவம்), பி.எஸ். கேசவன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை 96, விலை 100ரூ. பெண் ஜாதகத்துக்கு அமையும் கணவன், ஆணின் ஜாதகத்துக்கு அமையும் மனைவி குறித்த விவரங்களுடன் ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த நாள், நட்சத்திர பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், பரிகார முறைகள், திதிகள், சந்திராஷ்டமம், யோகங்கள், நேரங்கள், தோஷம், திருமண பொருத்தங்கள், தினப்பொருத்தம், கணப்பொருத்தம், சகுணங்கள், திருமண தடை நீங்க, ருது பலன்கள், பெண்கள் ஜாதக பலன்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

இந்திரா சந்திரா மந்திரா

இந்திரா சந்திரா மந்திரா, கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என்.பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 50ரூ பெரியவர்களுக்காக பல சிறந்த நாவல்களை எழுதியுள்ள கல்கி ராஜேந்திரன், சிறுவர்களுக்காகவும் பல்வேறு புனை பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார். ஜெயந்தி என்ற புனை பெயரில் அவர் எழுதிய இந்திரா சந்திரா மந்திரா என்ற நாவல் கோகுலத்தில் தொடர்கதையாக வெளிவந்தது. இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. சிறுவர் சிறுமிகள் புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்கும்வரை கீழே வைக்க மாட்டார்கள். அவ்வளவு விறுவிறுப்பு. நன்றி: தினத்தந்தி, […]

Read more

வெள்ளையானை

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, மதுரை, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-186-7.html அறியாத வரலாறு எதுவும் செய்துவிட முடியாமல் துயரத்தை மட்டுமே அடைகின்ற ஒரு நிலையை எதிர்கொள்ளும் மிக எளிய மனிதனின் மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், சூழ்நிலைகளோடு போராடும் சாதாரண மனிதன் அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை என்கிற புதிய நாவல். வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ் கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. […]

Read more

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி, ஓவியர் புகழேந்தி, தூரிகை, குக 63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78, விலை 175ரூ. ஆய்வுநூல் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடியான எம்.எஃப். உசேன் பற்றி ஓவியர் புகழேந்தி எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு நூற்றாண்டு இந்திய ஓவியக்கலையின் பல்வேறு கூறுகளை உசேனின் வாழ்க்கையின் வழியாகக் கூறுகிறது. இந்தூருக்கு அருகே எளிய போரா இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த உசேன் எந்த ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து முறைப்படி பயிலவில்லை. ஆனால் அவருடைய 100 […]

Read more

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1, அரவிந்தகுமாரன், தமிழ்லீடர், ஆஸ்திரேலியா. போர்க்காலம் தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் […]

Read more

காஞ்சிமகான் மகிமை

காஞ்சிமகான் மகிமை, சாரதா விஸ்வநாதன், விஜயா பப்ளிகேஷனஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே.சாலை, வடபழனி, சென்னை 26, விலை 70ரூ. காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்த தலைவர்களும், பிரமுகர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் பற்றிக் கூறும் விவரங்கள் அடங்கிய புத்தகம். சந்நியாசிகள் என்றாலே பிடிக்காதவர், சுப்பிரமணியசுவாமி. அவர் எப்படி பெரியவருக்கு பக்தரானார் என்பதை ஒரு கட்டுரை விவரிக்கிறது. அது மட்டுமல்ல, நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியும், காஞ்சிப் பெரியவரை இந்திராகாந்தி சந்தித்தபோது என்ன பேசினார் என்பது பற்றியும், பலரும் அறிந்திராத அபூர்வமான தகவல்களை […]

Read more

இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி, எஸ்.17/8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. இறைவனை பல வழிகளில் தரிசிக்கிறோம். அதில் இசைவழி பிரார்த்தனையும் ஒன்று. இசை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், சங்க காலத்து இசை வழிபாடு, மன்னர்கள் காலத்து இசை பிரார்த்தனை, பஜனைகள், திருப்புகழ் சபைகள், கிருஷ்ணர் ஜெயந்தி, இறைவனும்  இசையும், இசையின் இன்பம், பஜனை பலன்கள் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   —-   உயரிய சிந்தனைத் துளிகள், முனைவர் சோ. […]

Read more
1 222 223 224 225 226 336