தடைகளும் விடைகளும்

தடைகளும் விடைகளும், முரு.பழ.ரத்தினம் செட்டியார், சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம், 3, அண்ணாநகர், சோளிங்கர் 631102, பக். 306, விலை 120ரூ. சைவ சித்தாந்தத்தின் வழியில், பல்வேறு வடிவில் எழுப்பப்படும் சமயம் தொடர்பான 250 கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கேள்விகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் அருள் அறம், உலக நலம், ஊழ்வினை, பழக்க வழக்கங்கள், தெய்வமாடி, பேயகள், மந்திரங்கள், சித்துகள், வழிபாடு, புராணக் கதைகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. பால் குடிப்பது தீமையா, வட்டி […]

Read more

வடநாட்டு சிவத்தலங்கள்

வடநாட்டு சிவத்தலங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 450, விலை 340ரூ. பாரத திருநாட்டின் பழம்பெரும் செல்வங்கள் பக்தி வழிபாட்டு கோவில்கள், இந்திய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டும், இந்த கோவில்கள் பற்றிய அதிகமான செய்திகளை, இந்த நூலில் காண முடிகிறது. வடநாட்டில் உள்ள சிவத்தலங்கள், மாநில வாரியாக, விரிவாக படங்களுடன் தரப்பட்டுள்ளன. அரியானா, அருணாசலப்பிரதேசம், அசாம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா முதல் ஜார்க்கண்ட் வரை 16 வட மாநிலத் தலங்களை, […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more

சார்லி சாப்ளினின் எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை, சார்லி சாப்ளின், தமிழில்-சிவன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-469-1.html சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை சக்கரவர்த்தியை எல்லாரும் அறிவர். ஆனால் அவரது ஆராம் கால வாழ்வு எத்தனை துக்கம் நிறைத்தாக இருந்தது என்பது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 16ல் 1889ம் ஆண்டு சார்லி சாப்ளின் பிறந்தார். டிசம்பர் 1877, 25ம் தேதி மறைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணீர் […]

Read more

கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கேராசிரியர் கி. வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சிசெய்தனர். கோவை, சேலம், தர்மபுரி,கொங்குநாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். கோவில் வரலாறு, கல்வெட்டு புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப் படங்கள் மூலமும், ஒவ்வொரு கோவிலாக நூலாசிரியர் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல எழுதியுள்ளார். […]

Read more

தி.க.சி. நேர்காணல்கள்

தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ. தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், […]

Read more

கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கி.வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ. பழந்தமிழகத்தின் மேற்குப் பகுதி கொங்கு நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு பண்பாட்டின் வளர்ச்சியில் பேரிடம் வகிப்பவை ஆலயங்களே ஆகும். ஆன்மிகம், கட்டக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஆலயங்கள்தாம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு கூறும் சாட்சியங்களாக நிற்கின்றன. அந்த வகையில் கொங்கு மண்டலத்திலுள்ள கோயில்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த பேராசிரியர் […]

Read more

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை, பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள், வனிதா பதிப்பகம், 11, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 304, விலை 110ரூ இந்தக் கலியுகத்தில் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியும். அம்மாதிரி நேர்வழியில் குவியும் செல்வம்தான் நிலைத்து நிற்கும், துன்பமே தராத செல்வமாக இருக்கும் என்கிறார் நூலாசிரியர். நேர்வழியில் செல்வத்தை குவிக்க, மகாலட்சுமி திருவிளக்கு பூஜையை அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் என்று அவற்றை […]

Read more

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி, தங்கமணி, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 64, விலை 20ரூ. அந்த நாட்களில் சிறந்த குழந்தை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் பல விருகளைப் பெற்றவர். அன்னாரின் அக்காலச் சிறுவர் முழு நாவல் படங்களுடன் இடம்பெற்றுள்ளது. சிறுவர், சிறுமியர் படித்து மகிழ பயனுள்ள நூல். -எஸ். திருமலை.   —-   நீதி நெறி விளக்கம், முனைவர் இரா. குமரவேலன், பாரி புத்தகப்பண்ணை, 184/88, பிராட்வே, சென்னை 108, பக் 96, விலை 30ரூ. நீதி நெறி விளக்கம் […]

Read more

அன்பே சிவம்

அன்பே சிவம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 380, விலை 150ரூ. சிவபெருமான் உயிர் அம்சம் என்றால், உடல் சக்தி அம்சமாகும். சிவனும் சக்தியும் இணைந்த சொரூபமே சிவசக்தி சொரூபமாகும். இந்த உலகின் முதல்வர், அரசன், தலைவன், இறைவன் சிவபெருமானே, ஆதலால் அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே அத்வைதமாகும். சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள். அம்மையும் அப்பனுமாகிய இருவரும் […]

Read more
1 116 117 118 119 120 128