மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. திருமணங்களில் தவறாது ஒழிப்பது நாதசுர இசை. இந்த மங்கல இசையை இசைப்பதில் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். இவர்களில் முடிசூடா மன்னராக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவரைப்போலவே புகழ்பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, செம்பொன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை, ஷேக் சின்ன மவுலானா உள்பட 126 நாதசுர வித்துவான்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இது. மிகவும் சிரமப்பட்டு […]

Read more

பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ. அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: […]

Read more

முஸ்லிம் சட்டம்

முஸ்லிம் சட்டம், எஸ்.ஏ.சையது காசிம் அறக்கட்டளை, திரியெம்பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 300ரூ. திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், நபித்தோழர்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டது முஸ்லிம் ஷரியத் சட்டம். ஷரியத் என்றால் பாதை, நேரிய பாதை, சட்டம் என்று பெவாருள். திருமணம், திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு அளிக்கும் மஹர் (மணக்கொடை) திருமண முறிவு (தலாக்), ஜீவனாம்சம், காப்பாளர் பொறுப்பு, கொடை, உயில், சொத்துரிமை போன்ற முஸ்லிம் சட்ட கோட்பாடுகளை பேராசிரியர் எச்.எம்.அபுல்கலாம் முஸ்லிம்சட்டம் என்ற தலைப்பில் அழகிய முறையில் விளக்கி இருக்கிறார். மேலும் […]

Read more

மணிவாசகர் அருளிய திருவாசகம்

மணிவாசகர் அருளிய திருவாசகம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறுவார்கள். சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர் எழுதிய பாடல்கள் அவை. திருவாசகப் பாடல்கள் மொத்தம் 650. அப்பாடல்கள் கொண்ட அழகிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீஅருணாசல பஞ்சரத்னம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீ ரமண பக்த சமாஜம், சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை, புலமையும் பக்தியும் பளிச்சிடும் பஞ்சரத்தினத்தின் மையகருத்து, பாடல்களில் […]

Read more

மாமனிதர் நரேந்திரமோடி

மாமனிதர் நரேந்திரமோடி, திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குஜராத் முதல் மந்திரி – பிரதமர் வேட்பாளர் இப்படி பல சிறப்புகள் பெற்ற நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீரமண பக்த சமாஜம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை. புலமையும் பக்தியும் […]

Read more

சித்தரைத் தேடி

சித்தரைத் தேடி, கயிலை புலவர் சீ. சந்திரசேகரன், விஜயா பதிப்பகம், கோவை, பக். 592, விலை 400ரூ. ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர் சித்தரான கதை தெரியுமா? சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப்போல், கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும் குரங்கைப்போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே சித்தர்கள். சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன. ஆனால் இந்த நூலில் ஆசிரியர் மிக முயன்று, அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று 200பேர்களது வாழ்க்கை […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ. துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் […]

Read more

கங்கை கொண்ட சோழன்

கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், நான்கு பாகங்கள் சேர்த்து  விலை 1630ரூ. மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மாமன்னராக விளங்கிய ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் மிக சுவாரசியமாக எழுதப் பெற்ற நாவல். சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வுக்கட்டுரை அல்ல. அது ஓர் உணர்வுப் பெருக்கு என்று கூறும் இந்த நாவலின் ஆசிரியர் பாலகுமாரன், தனது உணர்வுகளைத் திரட்டி, இந்த சிரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார். கப்பல்கள் கட்டும் திறன், கடற்பயணம், போர்க்களம் போன்றவற்றின் நுணுக்கங்களை உள்வாங்கி, […]

Read more

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும், டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், வி.சி.எஸ். சிராமன், சேலம், விலை 300ரூ. குழந்தைகள் அனைவருமே நிறைய மதிப்பெண்கள் வாங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அனைவரது எண்ணங்களும் ஈடேறுவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 10 பேராவது படிக்கத் திணறுகிறார்கள். அப்படி படிப்பில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, அக்கறையெடுத்து, படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும் என்ற இந்த நூலை மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார் பிரபல மனநல மற்றும் குழந்தைகள் மருத்துவரான டாக்டர் எஸ்.எம். பகதூர் மொய்தீன். படிப்பில் குறைபாடுள்ள […]

Read more

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன், மூலம் தமிழாக்கம் விரிவுரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, பக். 1227, விலை 350ரூ. 1400 ஆண்டுகளுக்கு முன் மனித சமூதாயம் அனைத்திற்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், எதிரிகள் பலமுறை முயன்றும் இதற்குள் ஒரு மனித வார்த்தையைக்கூட திணிக்க முடியாமல், இன்று வரையும் அதன் புனிதம் பாதுகாக்கப்படுவதுதான். திருக்குர்ஆன், உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே அதன் மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. அத்தகைய திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் […]

Read more
1 83 84 85 86 87 128