மஹாபாரதம்

மஹாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ. எல்லோருக்குமான பாரதக் கதை இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும். ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் அனைவருள்ளும் எழும். இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மஹாபாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. […]

Read more

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ. இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் […]

Read more

கெடை காடு

கெடை காடு, ஏக்நாத், காவ்யா, சென்னை, பக். 184, விலை 170ரூ. ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள். காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு […]

Read more

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி, கன்னிக்கோவில் ராஜா, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்றுதான் பெரும்பான்மையான கதைகளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம். கன்னிக்கோவில் இராஜா எழுதியுள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி சிறுகதை தொகுப்பில் இதுபோன்ற ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. அதையே தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்துள்ளார். இதில் இடம் […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

கர்ணா நீ மஹத்தானவன்

கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ. தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு […]

Read more

உலகத் தகவல் களஞ்சியம் 100

உலகத் தகவல் களஞ்சியம் 100, பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. நமக்கு ஆச்சரியம் தரும் தகவல்கள், விசித்திரமான தகவல்கள், பயனுள்ள தகவல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை சிரமப்பட்டுத் தொகுத்துத் தந்திருக்கிறார் மனோஸ். பூமிக்கு வரும் ஆபத்து, மிதக்கும் விமான நிலையம், தனியாகக் கடலைக் கடந்த பெண், நாளிதழ் இல்லாத நாடு, இந்தியாவின் ஒரே பெண் சுல்தான் இப்படி ஏராளமான தகவல்கள். உலகின் முதல் பெண் டாக்டர் பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்த கால கட்டத்தில் (1800ம் […]

Read more

காலம்

காலம், ராஜம் கிருஷ்ணன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். […]

Read more

என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ. இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் […]

Read more
1 84 85 86 87 88 128