திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள்

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள், பேரா.பு.சி. இரத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. திருமூலர் அருளிய திருமந்திரத்தின் பாடல்களில் 42 பாடல்களை தேர்ந்து எடுத்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிலப்பதிகாரம் மூலம், மணிமேகலை மூலம், கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ120, ரூ120. ஒரு பக்கம் கணினி வரவால், இஷ்டப்படி பலரும் நூல் எழுதி சந்தையில் வெளியிடும் நேரத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டை கோவிலூர் ஆதினகர்த்தர் வெளியிட்டிருக்கிறார். இவை மூல நூல்களின் செம்பதிப்பாகும். […]

Read more

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை, சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 67, விலை 25ரூ. உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும் 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும் நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அன்பு என்ற கதை, […]

Read more

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில், கோபாலஸ்மி ரமேஷ், சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம் 602024, விலை  நன்கொடை மட்டுமே. பொதுவாக எல்லா பள்ளிகளுமே தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்றைய நிலையில் சேவாலயா தொண்டு நிறுவனம், கல்வியுடன் மாணவர்களக்கு இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், பொதுநலன் சார்ந்த நற்பண்புகளைப் போதித்தும் நீதிபோதனை (Moral Science) வகுப்புகளையும் பிரத்யேகமாக நடத்துகிறது. குறிப்பாக, மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறிய […]

Read more

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும், என்.எஸ்.கிருஷ்ணன் ஸ்வாமி, வரமங்கை பதிப்பகம், சென்னை 5, பக். 398, விலை 200ரூ. கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன்வைக்கின்ற நூல். பி.ஸ்ரீ.ஆச்சாரியாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. குறிப்பாக ஓர் கருஞாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி என்கிற திருவாய்மொழிப் பாடலும் கரு ஞாயிறு […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி, கல்யாணி வெங்கடராமன், திருமதி கல்யாணி வெங்கடராமன், 21ஈ, நியூடெக் ஐயப்பா என்க்ளேவ், ஸ்ரீ மாதவன் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை 34, பக். 480, விலை 280ரூ. இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகா புருஷர்களில் தலைசிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என்று எல்லா மதங்களும் அந்த ஒரே கடவுளைத்தான் அடைய வழிகாட்டுகின்றன. எனவே எந்த மதத்தையும், அதன் நெறிகளைஹயம் நிந்திக்கக்கூடாது. நேசிக்க வேண்டும் என்று சமய நல்லிணக்கத்திற்கு முதன் முதலாக வழிகாட்டியவர். காளிதேவியை நேருக்குநேர் தரிசனம் செய்தவர். இந்த […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more
1 94 95 96 97 98 128