நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு, Dr.C.S. ராஜு, டி.வி. சிவக்குமார், மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 192, விலை 100ரூ. கூட்டுக்குடும்பங்கள் இருந்த காலத்தில் எளிதாக இருந்த பிள்ளைகள் வளர்ப்பு, தனிக்குடுத்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கஷ்டமாகிவிட்டது. தவிர, பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும்கூட வளர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, இன்றைய பெற்றோர்களுக்கு சம்பாதிப்பதிலும் மற்ற பிரச்னைகளை சமாளிப்பதிலும் இருக்கும் ஞானம், பிள்ளைகள் வளர்ப்பு விஷயத்தில் போதிய அளவு இல்லை. விளைவு, பிள்ளைகளின் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 360, விலை 200ரூ. ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர். வைஷ்ணவம் என்பதன் விளக்கம், வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள், இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தின்பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், […]

Read more

வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ. அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 164, விலை 80ரூ. இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். வட்டார வழக்கும் உரையாடல்களோடு கூடிய இந்த நாவல் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல. சீரிய சிந்தனைக்கும் உரியது. -சிவா.   —-   மனிதனையும் தெய்வமாக்கும் சன்மார்க்க பெருநெறிகள், தெ. ராமநாதன், ஆர். பானுமதி, எண். 1/2, காமராஜர் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி 620004, பக். 168, விலை 50ரூ. திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க […]

Read more

மனிதனாகும் பொருளே

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ. ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன்.   —-   ஸ்ரீ […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு. கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசன் என்க்ளேவ்,10/18, வாசன் தெரு, தி.நகர், சென்னை 600017, பக். 400, விலை 250ரூ. ராமன் கம்பனுக்குள் வந்தார், கம்பன் டி.கே.சி.க்குள் வந்தார் என்றும், தமிழ் உரைநடை உயிரோட்டமுள்ளதாயும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாக அமைவதற்கு டி.கே.சி. தான் வழிகாட்டி என்று, மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பெற்றவர். என்னருமை நண்பா, இனிய கலை ரசிகா, தென்னர் தமிழ் வளர்க்கும் தேசிகா, என்றெல்லாம் நாமக்கல் கவிஞரால் பாராட்டப் பெற்றவர். குற்றாலம் என்றாலே, ரசிகமணியும் அவர் கண்ட வட்டத் […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறக்கட்டளை, சென்னை 4, பக். 146, விலை 25ரூ. ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் இந்த இதழ், 2 லட்சம் பிரதிகள் காணும் சிறப்பிதழாகவும், சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் குறித்து பிரபலங்கள் எழுதிய 60 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்று சுவாமிஜி எழுதிய கட்டுரை முத்தாய்ப்பாகத் திகழ்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி […]

Read more
1 95 96 97 98 99 128