இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம், ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 120, விலை 100ரூ. இசைக்கும் சமூகத்துக்குமான உறவு, இசைக்கும் கலாசாரத்துக்குமான உறவு, காலந்தோறும் இசை மாறி வந்த விதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இளையராஜாவின் இசைப் பங்களிப்பு, அவர் உருவாக்கியவை, சாதித்தவை, நாட்டுப்புற இசையை பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியதற்கும் இளையராஜா பயன்படுத்தியதற்குமான வேறுபாடு, அவரின் தனித்துவம் பற்றியெல்லாம் இன்னொரு கட்டுரை சொல்கிறது. இளையராஜா பற்றி 2002 ஆம் ஆண்டு அ. மார்க்கஸ், முன் வைத்த பார்வைகளை விமர்சனம் செய்யும் கட்டுரையும் […]

Read more

நெல்லை நாட்டுப்புறக் கலைகள்

நெல்லை நாட்டுப்புறக் கலைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை, பக்.216, ரூ.210. நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடம் கிராமங்கள். கிராமங்களில் நடைபெறும் விழாக்களின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்படுவதுண்டு. இன்று விவசாயம் நலிந்து, கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக பெரும் அளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய வேர்களிலிருந்து கிளை பரப்பி, மலர்ந்துள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அறிமுகமாகவும், நமது மரபை நாம் மறந்துவிடாமல் நினைவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஆலி ஆட்டம், […]

Read more

இசைப்பாட்டு இலக்கியம்

இசைப்பாட்டு இலக்கியம், கி. கோவிந்தராசு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. திரையிசைப் பாடல்களும் இலக்கியச் சுவையுடையவையே என்று நிறுவும் நூல். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், டி. ராஜேந்தர் ஆகியோர் பாடல்கள் வழி இதை நிரூபித்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஊமையின் பேச்சு, ந. வேலுசாமி, அருளகம் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. ந. வேலுசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. ரத்தமும் சதையுமான உறவுகளை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளன இக்கதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

சங்கீத மும்மணிகள்

சங்கீத மும்மணிகள், உவே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 292, விலை 180ரூ. தமிழ்த் தாத்தாவும் இசையும் இசைக்கு இசையாத மனித மனம் ஏதுமில்லை. சாகாவரம் பெற்ற இசையும் இசைவாணர்களும் என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்படிப்பட்ட இசைவாணர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அரிது. அதுபோன்ற அரிதான பதிவுகளில் ஒன்றுதான் தமிழ்த்தாத்தாவின் ‘சங்கீத மும்மணிகள்’ நூல். தாத்தாவின் இசைப்பணி தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடித் தேடி சேகரித்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் ‘கலைமகள்’ இதழில் எழுதிய இசை மேதைகள் மூவர் […]

Read more

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ. […]

Read more

வர்ம விமானம்

வர்ம விமானம், இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் தாணுவாலஜி, சென்னை, விலை 10,000ரூ. வர்மம் என்றால் நரம்பில் எழும் பிணக்கம். நம் உடலில் எண்ணிறைந்த நரம்புகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உடலில் படும் பல்வேறு பாதிப்புகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. வர்ம பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வர்ம மருத்துவத்தால் மட்டுமே சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். அந்த வகையில் 828 வர்மங்களின் இலக்கணம், பாதிப்பால் நிலவும் நிலைமை, சிகிச்சை வகைகள், பல்வேறு மருந்துகள் போன்றவை குறித்து இந்த நூலில் டாக்டர் எஸ். சிதம்பர தாணுப்பிள்ளை விரிவாக எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பொருள் […]

Read more

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more
1 2 3 4 5 6 8