இசைத்தமிழ்

இசைத்தமிழ், க. வெள்ளைவாரணனார், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக்குழுவினர் வெளியீடு. தமிழிசை மரபை பறைசாற்றும் இசைத்தமிழ் காலச்சென்ற க. வெள்ளைவாரணனார் எழுதிய, இசைத்தமிழ் என்ற நூலை, அண்மையில் படித்தேன். சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக் குழுவினர் இந்நூலை, 1979ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். முத்தமிழில் ஒன்றான இசைக்கு, மிக முக்கியமான ஒரு நூலாக இசைத்தமிழ் உள்ளது. இலங்கையைச் சேர்ந்த, இசை மேதை வமுலானந்தா, 1947ம் ஆண்டு எழுதிய, யாழ் நூலுக்கு, முன்னுரை எழுதியவர் வெள்ளைவாரணனார். வமுலானந்தாவின், மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை வைத்து, […]

Read more

தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடித் தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ. மழைநீர் சேமிப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில். இந்த ஆலயம் அமைந்துள்ள 3,32,000 சதுர அடி நிலப்பரப்பில் மாதம் மும்மாரி பொழிந்த தண்ணீரெல்லாம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு நான்கு நீர்த்தாரைகளின் வழியே சென்று ஆலயத்தின் வடபுறம் உள்ள சிவகங்கைக் குளத்தை சென்றடையுமாம். இது சிவபெருமானின் திருமுடிமீது பொழியும் கங்கை நீராகக் கருதப்பட்டதாம். இப்படிச் சேகரிக்கப்பட்ட தூய மழைநீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தஞ்சாவூரின் […]

Read more

தி மியூசிக் ஸ்கூல்

தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33. The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு […]

Read more

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல்

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல், டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர். உடலில் பச்சை குத்துதல், உலகெங்கும் காணப்படும் மிக பழமையான கலை. இது நாட்டுப்புற மக்களிடம் இன்றும் செல்வாக்கு பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற பாடல்களில் காணப்படாத இந்த கலை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளில் காணப்படுகிறது. அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தக் கலை, இப்போது இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியிலும் […]

Read more

தஞ்சைப் பெரிய கோயில்

தஞ்சைப் பெரிய கோயில், வி.அ. இளவழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிந்ததே. சைவ சமய இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட சிவ தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை, தான் மொழி பெயர்த்த திருவாசக நூலின் முன்னுரையில் ஜி.யு.போப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு நம் கோயில்களின் அருமை பெருமைகள் தெரிந்துள்ள அளவு தமிழ்நாட்டவர்க்குத் தெரியவில்லை என்பது கவலைக்குரியது. […]

Read more

திராவிட இயக்கமும் கலைத்துறையும்

திராவிட இயக்கமும் கலைத்துறையும், டாக்டர் மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 74, விலை 70ரூ. நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள் வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. கோவில்களில் அடைக்கலம் புகுந்து, திருமணங்களில் எட்டிப் பார்க்கும் நாகஸ்வரம் தவில் மங்கல இசை தமிழனின் தனி அடையாளம். கால மாற்றத்தால், மங்கல இசைக்கே மங்களம் பாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல் மீண்டும் புத்துயிர் தந்துள்ளது அந்த கலைக்கு. ருக் வேதத்தில் உள்ளது என்றும் கோவில்கள் தோன்றியபோதே, நாகஸ்வரமும், தவிலும் தோன்றிவிட்டதென்று இசை மேதை பி.எம்.சுந்தரம் ஆய்வு முன்னுரையில் அழகாக எழுதியுள்ளார். வாசித்து சாதனை செய்த […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

உளி எழுத்துக்கள்

உளி எழுத்துக்கள், யா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் சிற்பக் கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கற்களைக் குடைந்து அமைக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்பங்களும் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. சிற்பக்கலை பற்றி கண்ணையும், கருத்தையும் கவரும் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் பெருந்தச்சன் கரு. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி. குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்கிய சில்ப கலா பிரவீணா எஸ்.கே. ஆச்சாரி இவரது தந்தை. கன்னியாகுமரியில் 133 […]

Read more

த மியூசிக் ஸ்கூல்

த மியூசிக் ஸ்கூல், செழியன், த. மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சாலி கிராமம், சென்னை, விலை 7000ரூ. திரைப்படங்களில் நடிகர்களோ நடிகைகளோ, தங்கள் இரு கைகளாலும் பியானோவோ, கீ போர்டோ வாசிக்கும்போது, பல சமயம் நாமும் அப்படி ஒரு கணம் வாசிப்பது போன்று சிறு பிரம்மை, நம்மில் பலருக்கு தோன்றி மறையும். அந்த இசையின் நாதமும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் அப்படி எண்ணவைக்கும். அந்த எண்ணத்தை நனவாக்கித் தர வந்திருக்கிறது தி மியூசிக் ஸ்கூலின் இந்த பத்து புத்தகங்கள். இசை உங்கள் வாழ்வில் என்னென்ன மாயங்கள் […]

Read more
1 4 5 6 7 8