கணையாழிக் கதைகள் (1995-2000)

கணையாழிக் கதைகள் (1995-2000), தொகுப்பு ஆசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், வேல் கண்ணன், கவிதா பப்ளிகேஷன், பக். 288, விலை ரூ. 210. நவீன தமிழ் இலக்கியத்தில் “கணையாழி’ என்ற பெயர் பல உணர்வுகளைத் தூண்டக் கூடியது. நவீனம் என்றால் 1960-களுக்குப் பிந்தைய நவீன காலம். ஆனால் இப்போது விமர்சனத்துக்கு வந்துள்ள புத்தகம், புதிய தலைமுறையின் தலைமையின் கீழ் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. ஒரே இதழிலிருந்து மூன்று கதைகள் கூட இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிகத் தரமான கதைகள் மட்டுமே ஒவ்வோர் இதழிலும் வெளிவந்ததை இது காட்டுவதாகக் […]

Read more

எனது அமெரிக்கப் பயணம்

எனது அமெரிக்கப் பயணம், பேரா. கே. ஜெகதீசன், விஜயா பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. அமெரிக்கா போய் வருவது இன்று பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த அனுபவங்களை சுவைபடச் சொல்லி, படிப்போரை சொல்லப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்று அனுபவிக்க வைக்கும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது பேரா. கே.ஜெ.வுக்கு கைகூடியிருக்கிறது. அமெரிக்கா செல்லாதவர்களுக்கு வியப்பு. அமெரிக்கா சென்றவர்களுக்கு புது அனுபவம். நன்றி: குமுதம், 28/12/2016.   —-   அகிலமே என் அப்பாதான், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இன்றைய […]

Read more

பையன் கதைகள்

பையன் கதைகள், வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்ய அகாதெமி, பக். 752, விலை 365ரூ. சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த படைப்பில் “பையன்’ என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட 73 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மலையாள இலக்கியத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தி என்று போற்றப்படும் வடக்கேக் கூட்டாலெ நாராயணன்குட்டி நாயர் (வி.கெ.என்.) இக்கதைகளில் பல்வேறு துறைகளில் ஊடுருவியுள்ள குற்றம் குறைகளை அங்கதச் சுவை மிளிர அழகுற எடுத்துக் காட்டியுள்ளார். இலக்கியம், அரசியல் என கதைக்கு கதைக்கு வித்தியாசமானகளனைக் எடுத்துக் கொண்டு சமூக அவலங்களைப் […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன. மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன. ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் […]

Read more

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, அண்டனூர் சுரா, இருவாட்சி இலக்கியத் துறைமுகம், விலை 180ரூ. அண்டனூர் சுராவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் 19 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு சமூக நிகழ்வின் நிகழ்காலப் பதிவாக நம் கவனத்தை ஈர்க்கிறது. சிக்கலற்ற கதைப்போக்குகளுடன் இயல்பாக உள்வாங்க கூடிய கதைகளாக எல்லாக் கதைகளுமே இருக்கின்றன. வெறும் உரையாடல்களோடு மட்டுமே நிறைவுறா இக்கதைகள், ஆசிரியரின் அரசியல் சார்பையும் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

கண்ணீர்ச் சமுத்திரம்

கண்ணீர்ச் சமுத்திரம், குறும்பனை சி. பெர்லின், முக்கடல் வெளியீடு, விலை 90ரூ. நெய்தலின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் ஒருவரான குறும்பனை சி. பெர்லின் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதி கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பதிவுகளைக் கதைக்களன்களாகக் கொண்டிருக்கிறது. பொது வாசகர்களுக்கு அந்நியமான சொற்கள் ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னாலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடும் நெருக்கடிகள் நிறைந்த சம்பவங்களுக்கு இடையில் நறுக்குத் தெறித்தாற்போல் நகைச்சுவையும் இழையோடுகிறது. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

மரணத்தின் மீது உருளும் சக்கரம்

மரணத்தின் மீது உருளும் சக்கரம், தோப்பில் முஹம்மது மீரான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறு கதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 13/11/2016.   —-   சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், முடிகொண்டான் வெங்கட்ராம சாஸ்திரிகள், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 65ரூ. எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர் சாணக்கியர். அவர்சொன்ன வழியில் இன்றைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள், ஏவி. எம், நஸீமுத்தீ, கிழக்கு பதிப்பகம், பக். 127, விலை 110ரூ. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன இதிகாசக் கதைகள் கற்பனையில் சிறகடித்து, நம்பிக்கையில் கால் பதிக்கிறது. மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்ற உணர்வுகளை, இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சீனாவின் சமூக, சமய வரலாற்றையும் இக்கதைகள் தொட்டுக்காட்டுகின்றன. மாயாஜலம், கற்பனை, வினோதம், அற்புதங்கள் இக்கதைகளில் இழையோடும், ஆனாலும், சீன மண்ணின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் அவை தாண்டி விடாது. இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீனப் […]

Read more

வருகிறார்கள்

வருகிறார்கள், கரன் கார்க்கி, பாரதி புத்தகாலயம், பக். 392, விலை 295ரூ. ‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவது அரசின் கடமை என வலியுறுத்தி, பூமி எங்கும் போராடும், போராடுகின்ற போராடத் துணிகிற இளைஞர்களுக்கு இந்நூல் என்ற சமர்ப்பணத்துடன் துவங்குகிறது இந்த நாவல். மதங்கள், ஜாதிகள் பெயரால் நாளும் நடந்தேறும் கவுரவக் கொலைகள், தண்ணீரை அநியாய விலைக்கு விற்று மக்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், யார் […]

Read more

முதல் வரிசை மூன்றவாது இருக்கை

முதல் வரிசை மூன்றவாது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, பக். 208, விலை 160ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. ‘சுருக்’ கமாக ஒரு விஷயத்தைச் சொல்லி அதனைப்பற்றி அசைபோட வைப்பதில் தேர்ந்தவர் படுதலம் சுகுமாரன். இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. அப்படிப்போடு அருவாளில் வரும் புவனாவாகட்டும், முதல் வரிசை மூன்றாவது இருக்கையில் வரும் ஜானகியா கட்டும் அன்றாட வாழ்வின் எதார்த்த பெண்களின் பிரதிபலிப்புகள். பெரும்பாலும் பெண்மையை, அவர்களின் ஆழ் மனதை எடை போடும் கதைகளே அதிகம். […]

Read more
1 31 32 33 34 35 80