நூறு வடமொழிக் கதைகள்

நூறு வடமொழிக் கதைகள், பத்ம சாஸ்திரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 150ரூ. வடமொழிக் கதைகள் என்பதை சம்ஸ்கிருத கதைகள் என்று புரிந்து கொண்டு படித்தாலும், இந்தக் கதைகள் எந்த வட்டத்துக்குள்ளும் பொருந்தவில்லை. மரபுவழிக் கதைகளா, நீதிக்கதைகளாக, புனைவுகளா, வேற்றுமொழிக்கதைகளா, பஞ்ச தந்திர கதைகளின் மாற்றுருவா? எதையும் நூலாசிரியர் சொல்லவே இல்லை. வாசகனே அவரவர் வாசிப்பின் பரப்புக்கேற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். நூறு கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளை “நன்று‘’ எனச் சொல்லலாம். குறிப்பாக, “இரும்பு வியாபாரி”, “அரசனின் […]

Read more

வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ. அரிவாள் மணையில் நறுக்கிய மீன் பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் […]

Read more

அசோகமித்திரன் சிறுகதைகள்

அசோகமித்திரன் சிறுகதைகள், தொகுப்பு க. மோகனரங்கன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 1450ரூ. 274 சிறுகதைகள் கொண்ட அசோகமித்திரனின் ஒட்டு மொத்தத் தொகுப்பு இது. எல்லாவற்றையும் மொத்தமாகப் படிக்கும்போது, இலக்கியத்தில் அவர் எவ்வளவு தூரம் சமரசமின்றி செயல்பட்டு இருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. சிறுகதை என்பது வெறும் மொழியோ, புனைவோ, வடிவநேர்த்தியோ, உத்திப்புதுமைகளோ மட்டுமன்று. அது அசோகமித்திரனின் எழுத்தில் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவது. அப்படிப் பார்த்தால் அவரின் கதைகளில் எப்போதும் மேலதிக ஆழமுண்டு. மிக எளிய மனிதர்களின் நாடித்துடிப்புகளை ஆகப்பெரும் அன்போடும், கண்ணீரோடும் தொட்டுத் தடவி […]

Read more

கண்டி வீரன்

கண்டி வீரன், ஷோபாசக்தி, கறுப்புப் பிரதிகள், விலை 160ரூ. ஈழத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஷோபாசக்தி. அவரின் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மேம்போக்கான வாசிப்பு தவிர்த்து, ஆழ்ந்த கவனிப்பை வேண்டுபவை அவரின் கதைகள். அவரின் படைப்பு மொழி, ஆக்கம், கதையை இறுதிக்கு நகர்த்தும் விஷயம் எல்லாமே மிகுந்த அக்கறைக்கு ஆட்பட்டு நடந்தேறும். படித்து முடித்ததற்குப் பின்னாலும், நம் மனசை இறுக்கி, அசை போடத் தூண்டும் அவர் எழுத்து. இதில் இருக்கிற ‘சுண்டி வீரன்’ சிறுகதை, கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட வேண்டியது. அகதி […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. பதினென் சித்தர்கள் யாவரும் ஆதிசித்தனாகிய சிவனிடம் நேரடியாக தீட்சை பெற்றவர்கள். இந்த சித்தர்களை பற்றிய தெளிவான விரிவான தகவல்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 115ரூ. தனித்துவமான கதைக் களங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், மதுரை பாலன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை 120ரூ. நூலாசிரியர், திரைத்துறையில் பணியாற்றி வருபவர். அவரது சிறுகதைகள், திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. காட்சிகள் நகரும் விதம் அருமை. காதல் ஆகட்டும், ஜாதி மோதல் ஆகட்டும் எதைப் பற்றியும் நம்மை உசுப்பி விடும் விதத்தில் கூறிச் செல்கிறார். பாலியல் தொழிலாளியின் அவல வாழ்வைச் சொல்லும், ‘சுழல்’, ஜாதிக் கலவரங்களைச் சொல்லும், ‘தீண்டாமை’ மற்றும் ‘அடங்கா நெருப்பு’, மனைவியின் கடந்த காலத்தை ஒரு சந்தேகக் கணவன் கிளறிப் பார்ப்பதைச் சொல்லும், ‘எதிர்மறை’ […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

வைதீஸ்வரன் கதைகள்

வைதீஸ்வரன் கதைகள், எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், பக்.304, விலை ரூ. 225 தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. “பிம்பம்’ என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. “கதையாக’ அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் […]

Read more

வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more
1 33 34 35 36 37 80