மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம், சென்னை 15, பக். 112, விலை 60ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-486-2.html மகாகவி பாரதியார் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், ஔவை நூல்கள், சித்தர் பாடல்கள், வள்ளலார், தாயுமானவர் போன்றோரது பாடல்களைத் தனது எழுத்தில் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் அவர் சங்க இலக்கியங்க்ளையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் எந்த அளவுக்கு அறிந்திருந்தார். எந்த அளவுக்கு அவற்றைத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இந்நூல் […]

Read more

பாரதி குழந்தை இலக்கியம்

பாரதி குழந்தை இலக்கியம், சுகுமாரன், உலகத் தமிழர் பதிப்பகம், 4, சவுராஸ்டிரா நகர், சூளைமேடு, சென்னை 94, விலை 70ரூ. பாப்பா பாட்டை தவிர குழந்தை இலக்கியத்திற்கென்று எதையும் பாரதியார் எழுதவில்லை என்று சிலர் எண்ணுகிறார்கள். அதனை பொய்பிக்கும் வகையில் மகாகவி பாரதியார் எழுதிய பாடல்கள், கதைகளில் இருந்து குழந்தை இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நூலை தொகுத்து வழங்கி உள்ளார் ஆசிரியர் சுகுமாரன். இந்த நூலில் பாரதியாரின் கவிதைகள், கதைகள் இடம் பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.   —-   […]

Read more

சமகால இந்தியச் சிறுகதைகள்

சமகால இந்தியச் சிறுகதைகள் (தொகுதி 4), ஷாந்தி நாத் கே. தேசாய், தமிழாக்கம்-மெஹர் ப. யூ. அய்யூப், சாகித்ய அகாடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷ் ஷா சாலை, டில்லி 110 001, பக். 512, விலை 325ரூ. தமிழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வீடு சிறுகதை உட்பட சமகால இந்திய எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் ஆங்கிலம் வாயிலாகத் தமிழாக்கம் பெற்றுள்ளன. கே.எஸ். துக்கல் பஞ்சாபி மொழிக் கதையாசிரியர் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வாடகை காரோட்டி சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இந்தியில் நிர்மல் வர்மாவின் […]

Read more

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு, எஸ். ராமன், ஆங்கில மூலம்-எஸ். லட்சுமி நாராயணன், இந்துத்துவப் பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, பக். 278, விலை 150ரூ. ஸ்ரீ ராம பிரான் அவதரித்து 5000 ஆண்டுகள் ஆன பிறகும், அவருடைய மனிதாபிமான குணங்கள் இன்றும் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வழி காட்டும். ராமரின் வாழ்க்கைச் சம்பவங்களை நன்றாக அறிந்து கொண்டதால்தான், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்காக நடத்த முடியும் என்று வாதிடும் ஆசிரியர், […]

Read more

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள், அசோகமித்திரன், நந்றிணை பதிப்பகம், பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-1.html   மகத்தான நாவல் வரிசையிலும், அசோகமித்திரனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இந்த நாவல் வெளிவந்துள்ளது. சினிமா தொழிலில் தொடர்புள்ளவர்கள் பற்றிய நாவல் இது. இருந்தாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் லௌதீக, லோகாயதமான வாழ்க்கை சம்வங்களையே முன் வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. நா.பா. நடத்திய தீபம் இலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்த, இந்த நாவல் பரவலாக, இலக்கிய அன்பர்களால் அதிகம் […]

Read more

தொழிலாளி டு முதலாளி

தொழிலாளி டு முதலாளி, இராம்குமார் சிங்காரம், பெரிகாம், 37, அசீஸ்மல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, பக், 112, விலை 80ரூ. காய்கறிக் கடைக்காரர் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வரை தமக்கென ஒரு தொழில் பாதையைக் கண்டு முன்னேறியவர்களின் நேர்காணல்களே இந்நூல். சொந்தத் தொழில், நாமே அதற்கு முதலாளி என்று களம் இறங்கியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், பிரச்னைகளைக் கண்டு துவண்டு போகாமல் முன்னேறும் வழிகள் என்று தொழில் முனைவோருக்கு எழும் சந்தேகங்களுக்கு நேர்காணலில் இடம்பெற்ற 23 தொழிலதிபர்களும் எளிய […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

ஊஞ்சல்

ஊஞ்சல், உமா ஜானகிராமன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 122, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-325-7.html ஆசிரியை உமா ஜானகிராமன் இரக்கம் மிகுந்தவர் என்பது, இந்தத் தொகுதியைப் படிக்கும்போது தெரிகிறது. மேல்நாட்டு மருமகளை வெறுக்கும் ஒரு சாதிரிகள், கடைசியில் அவள் அன்பின் ஆழத்தைக் கண்டு சிலிர்க்கும் மேன்மையைச் சொல்லும் புத்திர சோகம் இதிலுள்ள சிறந்த கதை. மேடுகள் பள்ளங்கள் என, பல நேர்த்தியான சிறுகதைகள் அடங்கிய சிறந்த தொகுதி. […]

Read more

அண்டமும் ஆன்மீகமும்

அண்டமும் ஆன்மீகமும், பி. ஆர். வெங்கட்ராஜு, சாகித் பப்ளிகேஷன்ஸ். அண்டத்திலும், ஆன்மீகத்திலும் புதைந்து கிடக்கும் புரியாத புதிர்களை, தர்க்க ரீதியில் கோர்வையாகப் புரிய வைக்க ஆசிரியர் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டியிருக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தாஜி, ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். இந்த நூல் அறிவியலையும், ஆன்மீகத்தையும் அற்புதமாகத் தொடர்புபடுத்தி சில மேற்கோள்களையும் சில தகவல்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வரும். ஆசிரியரின் பணி வியக்க வைக்கிறது. சுவாமி விமுர்த்தானந்தாஜியின் பாராட்டு மெத்தச் சரியே. வியப்பூட்டும் விஞ்ஞானம், இந்நூலில் அதி அற்புதமான மெஞ்ஞானத்துடன் கைகோர்த்துக் கொண்டு நம்மை வாசிக்கத் […]

Read more

திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ. சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற […]

Read more
1 69 70 71 72 73 80