வலது காலை எடுத்துவைத்து வா…

வலது காலை எடுத்துவைத்து வா… ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, விலை ரூ. 65 பல பேர் நல்ல கதைகளை எழுதியிருந்தால் உரிய வெளிச்சம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ‘மங்கை’, ‘சுமங்கலி’ இதழ்களில் ஆசிரியராக இருந்த ‘பொம்மை’ சாரதியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக 1951-ஆம் ஆண்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘காவேரி’ மாத இதழில் வெளியான ‘முதல் பிச்சை’ என்னும் தலைப்பிலான சிறுகதையைச் சொல்லவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிரஞ்சீவியாகத் தோற்றமளிக்கிறது. ‘தமிழின் முதல்தரமான சிறுகதைகளுள் இது ஒன்று’ என்று […]

Read more

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுச்சாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 600061. விலை ரூ. 200 ராஜீவ் படுகொலை, இந்தியத் துணைக்கண்டத்தின் தீராத புதிர். தமிழகத்தில் மூன்று பேரின் கழுத்தில் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் புதிர் குறித்த தீவிரமான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கொடூரமான இந்தக் கொலை குறித்து தீர்க்கப்படாத பல கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இந்த கேள்விகளின் வாயிலாக ராஜீவ் படுகொலை […]

Read more

கொண்டலாத்தி

கொண்டலாத்தி, எழுதியவர்: ஆசை, பக்கம் 62, க்ரியா, சென்னை. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-7.html புள்ளினங்கள் பற்றி நாற்பத்திரெண்டு எழிலான கவிதைகள், அவைகளில் வெளிப்படும் பறவைகளின் தீவிர ஈடுபாடு, கண்ணையும் மனதையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், உள்ளடக்கத்திற்கேற்ற நூல் உருவாக்கம். சுகமான வாசிப்பனுபவம் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நூலின் ஆசிரியர், ஆசை என்று கையெழுத்திட்டிருக்கும் ஆசைத்தம்பி, முன்னர் ‘சித்து’ என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழுக்கு எவ்வளவு நீண்ட கவிதை மரபு […]

Read more

தீராத விளையாட்டு விட்டலன்

தீராத விளையாட்டு விட்டலன், அருண் சரண்யா, பக். 240, கல்கி பதிப்பகம், சென்னை – 32. விலை ரூ. 200 மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மகாபக்தர்களின் சரிதங்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியச் செய்பவை; நம்மை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துபவை. பண்டரிபுரத்தில் அருளாட்சி புரியும் பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களின் சரிதத்தை நூலாசிரியர் அற்புதமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார். கண் கவரும் வேதாவின் ஓவியங்களும், ஸ்ரீஹரியின் புகைப்படங்களும் இந்நூலுக்கு மெருகு சேர்க்கின்றன. நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18. விலை ரூ. 90 ‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக […]

Read more

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில்

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில், ‘பொம்மை’ சாரதி,  பக். 432, ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 180 வேத வியாஸரால் இயற்றப்பட்ட மகாபாரதம், தலைசிறந்த பண்புகளையும், தர்மநெறிகளையும் விளக்குவதால், இது ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது. இதில் மனித மனத்தின் பலவீனங்கள், திருந்தும் வழிகள், இறைநெறி, தத்துவம், அரசியல், சரித்திர கால நிகழ்வுகள்… என்று பல்வேறு செய்திகள், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதில் வரும் ஏராளமான கிளைக் கதைகளும் வாழ்க்கை நெறிகளைப் போதிப்பவையே. […]

Read more

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஆர்.சி. சம்பத், பக். 104, காளீஸ்வரி பதிப்பகம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர். சென்னை – 17. விலை ரூ. 40 எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியா முழுதும், வெள்ள நிவாரண நிதி, கல்வி, சமூக நிறுவனங்களின் வளர்ச்சி நிதி போன்ற சேவைக்காக கச்சேரி நடத்தி திரட்டித் தந்த நிதி ஏராளம். இப்படியொருவர் இந்திய இசையுலகில் வாழ்ந்தார் என்பதே உலகுக்கே பெருமை. அதுவும் தமிழகத்திற்கு சிறப்பு. அத்தகைய இசையரசியின் வாழ்க்கையைத்தான் நூலாசிரியர் எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி ஆகியோருடனான நட்பு, தமிழிசைக்கு […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே!

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே! முனைவர் துளசி இராமசாமி,  பக். 888, வெளியீடு: விழிகள், 664, 3வது தெரு, வீனஸ் குடியிருப்பு விரிவு, வேளச்சேரி, சென்னை – 42. விலை ரூ. 700 பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும், நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றைச் சேகரித்துத் தொகுத்தவை என்றும், அதில் வரும் அடி வரையறைகளைக் கொண்டே தொகுப்புகளுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து முனைவர் துளசி. இராமசாமி இந்நூலை எழுதியுள்ளார். இவை எல்லாம் எழுத்து – தமிழ் – பிராமி கண்டுபிடிக்கப்பட்ட பின் தொகுக்கப்பட்டவை என்பதையும் ஆய்வில் […]

Read more

மாவீரன் தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை, உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி எண் 1, பி.என்.புதூர், கோவை – 41. விலை ரூ. 100 ‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஆண்ட தீரன் சின்னமலை’ என்று அம்பிகாபதிப் புலவரால் பாடப்பட்ட மன்னனின் கதை இது! மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை, ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். ஹைதர் அலி இறப்புக்குப் பிறகு, மைசூர் மன்னராகப் […]

Read more

கணினியின் அடிப்படை

கணினியின் அடிப்படை, ஜெ. வீரநாதன், வெளியிட்டோர்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் – 641045. விலை ரூ. 123   கணினி நமது அடிப்படைத் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் இதனை கையாளமுடியும். அறிமுக நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை 31 தலைப்புகளில் புரியும்படி விளக்கப்படங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். விண்டோஸின் சமீபத்திய பதிப்பான, பதிப்பு 7-ஐ மையமாக வைத்து புத்தகத்தை எழுதியுள்ளார். கணினி மட்டுமல்லாமல் அதனுடன் […]

Read more
1 3 4 5 6 7 16