வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் (சமூக நாவல்), ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.65 குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’ என்கிற தோரணையில் அருணாவின் கணவன் வினோத் நடக்கிறான். அதனால் கணவனைப் பிரிகிறார்; ஆனால் நிலை குலைந்து விடவில்லை. மகளை வளர்த்து ஆளாக்குவதிலும், ஐ.ஏ.எஸ்., படிக்க வைத்து கலெக்டர் ஆக்குவதிலும் ஆத்ம திருப்தியும், ஆத்ம பலமும் கிடைக்கின்றன. கல்வித் திட்டத்தில் ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடத் திட்டம் வேண்டும் என்று மகளை வற்புறுத்துகிறார். சமூக சீர்திருத்த நாவல்! – […]

Read more

பிச்சிப் பூ

பிச்சிப் பூ, பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.70. பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார். குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் […]

Read more

கடவுளின் நாற்காலி

கடவுளின் நாற்காலி, அதியமான் கார்த்திக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.200, விலை ரூ.220.   இயற்கையுடன் முரண்பட்டு பூமிப் பந்தின் வளங்களை சுய லாபத்துக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, வேற்று கிரகங்களையும் ஆளத்துடிக்கும் பெருங்கோ பாண்டியன் என்பவரைத் தடுத்து நிறுத்தி, பாரம்பரியத்தையும் இயற்கை வளங்களையும் கேசவன் என்பவர் காப்பாற்றுகிறார். தமிழகத்தின் குக்கிராமத்தில் தொடங்கி நாகாலாந்து வழியே தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம் வரை பயணிக்கிறது “கடவுளின் நாற்காலி’. வருடந்தோறும் சைபீரியாவிலிருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்துக்கு வலசை வரும் ஆமூர் பால்கன் பறவைகளை அங்குள்ள நாகா பழங்குடிகள், கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், சுஜாதன், காவ்யா, விலைரூ.350. இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். மலையாள மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து உள்ளார், ப.விமலா. இந்த பூ உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தார் விவேகானந்தர். அடிப்படை வளர்ச்சிகள் கூட காணாத காலக்கட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, ஞானம் பெற்றவர்; வெளிநாடுகளிலும் பயணம் செய்து ஞானத்தை பரப்பியுள்ளார். அந்த மகத்தான பயணங்களையும், அதன் அடியொற்றிய வாழ்க்கையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read more

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்,  அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150. கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது. கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். […]

Read more

சாயத்திரை

சாயத்திரை, சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.218, விலை ரூ.200. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கிவரும் சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கருப்பொருளாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் “சாயத்திரை’. ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி நஷ்டப்பட்ட சாமியப்பன், அவருடைய உதவியாளர் பக்தவச்சலம் – ஜோதிமணி, அந்நிறுவனத்தின் காவலாளி நாகன் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு முதியவர் (செட்டியார்) ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு வட்டார வழக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை ஆகியவை தனித்தனியே விவரிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் […]

Read more

விஷக்கிணறு

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. புது அனுபவங்கள் ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ. ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநவால்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்தக் கால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400. நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட […]

Read more

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்,  உலகப் புகழ்பெற்ற ஆறு நாவல்களின் சுருக்கம்,  தமிழில்  முல்லை பிஎல் முத்தையா,  பக்.736, விலை ரூ. 700. மாக்ஸிம் கார்க்கியின் “அம்மா’, லியோ டால்ஸ் டாயின் “அன்னா கரினினா’, டாஸ்டாவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “வாடாமல்லிகை’ என்ற தலைப்பில் அலெக்ஸாண்டர் டூமாஸ் ஜூனியரின் “கேமிலி’, எமிலி ஜோலாவின் “நாநா’, “ஐந்து சகோதரிகள்’ என்ற பெயரில் ஜேன் ஆஸ்டினுடைய “பிரைட் அன்ட் பிரிஜுடீஸ்’ நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார் பிஎல். முத்தையா. 1905-இல் ரஷியாவில் நிகழ்ந்த விவசாயிகள் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, மக்களின் மத்தியில் […]

Read more
1 2 3 4 5 66