கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள், பெஸ்ட் போட்டோ கிராபி டுடே, பக். 196,விலை 200ரூ. புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டுடே குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம்தான், இந்த நூல். வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள் படம் எடுத்தாலும், சுற்றுச்சூழலுக்கு இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு அறிமுகமும், தொடர்பும் இல்லாத நிலை இருப்பதால், வீண் அலைச்சல், செலவு […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில்-ஞலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html கதை சொல்லும் முறையில் புதிய திசைகள் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. மகோந்தா என்ற நகரம் உருவாவதிலிருந்து அழிவது வரை அதை உண்டாக்கிய குடும்பத்தின் வழிவழியாய் வருகிற மனிதர்களைச் சுற்றிப் போகிறது கதை. ஒரே மூச்சில் படித்து மூடும் வேகம் கொண்டவர்களுக்கல்ல இந்தப் புத்தகம். ஒரு நகரத்தின் பிறப்பு, எழுச்சி, வீழ்ச்சி என்பது எந்தவொரு நாடு, […]

Read more

நீர் கொத்தி மனிதர்கள்

நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-5.html தண்ணீர் வணிகமயம் ஆக்கப்பட்டிருக்கும் காலத்தில் அது சாதிமயம் ஆக்கப்பட்டிருப்பதைத் தோலுரித்துக் காட்டும் புதினம் நீர் கொத்தி மனிதர்கள். அபிமானியின் கவிதைகள், சிறுகதைகள், தமிழ்ப் படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அவரது அனுபவக் கிடங்கு ஆழமானது. கட்டவிழ்க்க முடியாத வலிகளோடு நிரம்பிக் கிடப்பது. அதன் ஒரு பகுதியே இப்புதினம். அணிந்துரையில் தண்ணீர் கொடுமையை முன்னிறுத்தித் தமிழில் முதலில் வரும் தலித் எழுத்து இது […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ. மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் […]

Read more

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ. அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. […]

Read more

கொடை காடு

கொடை காடு, ஏக்நாத், காவ்யா பதிப்பகம், சென்னை. திருநெல்வேலியைச் சேர்ந்த, எழுத்தாளர் ஏக்நாத்தின், கொடை காடு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். காவ்யா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. நெல்லை அருகில் உள்ள கல் ராக்கி மலைப் பகுதிக்கு, கால்நடைகளை மேய்க்க செல்வது பற்றி, இந்த நாவல் விவரிக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கையை பற்றி, தமிழில் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். சீன மொழியிலிருந்துகூட, மேய்ச்சல் வாழ்க்கை நாவல் தமிழுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ஏக்நாத்தின் கொடை காடு நாவல் இடம் பெறுகிறது. கால்நடைகள் வீட்டின் ஒரு […]

Read more

வந்தாராங்குடி

வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]

Read more

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8, சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 344, விலை 175ரூ. எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் ஒரு மனிதனின் கதை, நண்டு, அம்மா சொன்ன கதைகள் ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த […]

Read more

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி, ரத்னாகரன், மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 140ரூ. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணும் ஒரு வேகத்தையும், தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவலாகும். இதனை படிப்பதன் மூலம் பெண்ணின் பெருமையை உணரமுடிவதுடன், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —-   மனத்தில் பதிந்தவர்கள், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இதழில் மாதம் தோறும் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ. இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை […]

Read more
1 46 47 48 49 50 66