மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more

ஆறா வடு

ஆறா வடு, சமயந்தன், தமிழினி பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ. ஈழப்போரின் துயரமான பக்கங்கள் போர் பின்னணியிலான கதையுடன் அதிர்ச்சியும் பதற்றமும் ஊட்டும் ஈழ இலக்கியத்தின் முக்கியமான நாவல். எண்பதுகளில் தீவிரமான ஈழத்தமிழர் அரசியல் பிரச்சனையின் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன. இலங்கை அரசாங்கத்தினை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய தமிழர் இயக்கங்களின் செய்றபாடுகள், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறை, இந்திய அரசின் அமைதிப்படை உள்ளிட்ட நடவடிக்கைகள் எனத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அளவற்றவை. ஈழத்தில் தமிழின விடுதலையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மக்களின் […]

Read more

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை, விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 240ரூ. சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடமன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிகொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் […]

Read more

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக, செங்கை பதிப்பகம், 349/166, அண்ணாசாலை, செங்கல்பட்டு603002, விலை 110ரூ. பட்டணத்துப் பெண் சகுந்தலாவும், அத்தை மகன் வெங்கடேசும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தை வீட்டில் பணத்தால் நிராகரிக்கப்படுகிறாள். அந்த வேதனையால் கிராமத்திலிருந்து பெண் கேட்டு வந்த சங்கரனை கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். கிராமத்து வாழ்க்கை ஒரு புதுவிதமான அனுபவத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அதேசமயம் சங்கரனின் பங்காளிகளால் உருவாக்கப்பட்ட சொத்து பிரச்சினையில் சங்கரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு துன்பமும், துயரமும் அனுபவிக்கின்றான். அன்பு, பாசம், துக்கம், இரக்கம் என்று எல்லா உணர்ச்சிகளிலும் தத்தளிக்கிறார்கள். […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கரசரவணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 195ரூ. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. ஆயினும், இந்தியாவுக்குள் வெள்ளையர்கள் எப்படி நுழைந்தார்கள், ஆட்சியைப் எப்படி கைப்பற்றி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விவரங்கள் என்ன இதுபற்றி எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாகவும், விறுவிறுப்பாகவும் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகள், இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டனர். அந்தக் காலக்கட்டத்தில் எத்தனையோ வரலாற்று […]

Read more

கழிசடை

கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம். கும்பிட வேண்டியோரை எள்ளி நகையாடுகிறோம் எழுத்தாளர் அறிவழகன் எழுதிய கழிசடை நாவலை, அண்மையில் படித்தேன். அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது. நகர்ப்புறத்தில் மலம் அள்ளும் அருந்தியர் வாழ்க்கையை, இந்நாவல் சித்தரிக்கிறது. மலம் அள்ளும் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை விவரித்துக் கொண்டே செல்லும் நாவல், மலம் அள்ளும் தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளையும் கடத்துவதே வாழ்கையின் வெற்றி என சொல்கிறது. மலம் அள்ள சென்றாலோ, சாக்கடைகளின் அடைப்புகளை எடுக்க சென்றாலோ, அவர்களை மனிதனாக நடத்தி, வேலை வாங்கும் சூழல் இல்லை. சாக்கடைகளை […]

Read more

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல்

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல், டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர். உடலில் பச்சை குத்துதல், உலகெங்கும் காணப்படும் மிக பழமையான கலை. இது நாட்டுப்புற மக்களிடம் இன்றும் செல்வாக்கு பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற பாடல்களில் காணப்படாத இந்த கலை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளில் காணப்படுகிறது. அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தக் கலை, இப்போது இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியிலும் […]

Read more

மிளிர்கல்

மிளிர்கல், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. புகாரில் இருந்து கண்ணகி கோவலனுடன் கிளம்பிச் சென்று மதுரையை எரித்து பின்னர் தன்னந்தனியே காடேகி மலை உச்சிக்குச் சென்று பத்தினித் தெய்வமான கதை சிலப்பதிகாரம். கண்ணகி மண்மகள் பாராத தன் வண்ணச்சீரடிகளுடன் புகாரில் இருந்து நடந்து சென்ற வழியே பயணிக்கும் இந்நாவல் தன் பயணத்தின் வழியாக சிலப்பதிகாரம் தொடர்பான பல கேள்விகளுக்கு சமகாலப் பார்வைகள் வழியாக விடை காண முயல்கிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் காங்கேயம் பகுதியில் கிடைப்பதாகச் சொல்லப்படும் மாணிக்கம் போன்ற அபூர்வ கற்களைச் […]

Read more

அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ. நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய […]

Read more
1 45 46 47 48 49 66