ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more

சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 655, விலை 360ரூ. சுவாமி விவேகானந்தரின் தெய்வீக வலாற்றைக் கூறும் இந்நூலைத் தொடர்ந்து படிக்கும்போது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பசி, பட்டினி, வறுமை, குடும்ப சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு, ஏளனம், பரிகாசம், அவமதிப்பு அத்தனையையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தார் என்பது தெரிகிறது. அதேபோல் 11/9/1983இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது வரையிலும் கூட […]

Read more

மரபும் மரபு சார்ந்தும்

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ. கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள். மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது. மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 360, விலை 200ரூ. ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர். வைஷ்ணவம் என்பதன் விளக்கம், வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள், இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தின்பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், […]

Read more

நாட்டு வைத்திய களஞ்சியம்

நாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ. எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, […]

Read more

செவ்வியல் இலக்கிய மணி மாலை

செவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

சங்க இலக்கியம் சில பார்வைகள்

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]

Read more

நுனிப்புல் மேய்தல்

நுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ. பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம். -சிவா.   —-   ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, […]

Read more
1 714 715 716 717 718 841