போதி தருமர்

திருக்குறள், ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2-ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5; விலை ரூ. 295 திருக்குறள் மூலமும் விளக்க உரையும் புத்தகத்தை மூத்த தமிழறிஞர் நன்னன் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்ட உரைகள் வந்திருந்தாலும் புலவர் நன்னனைப் போல எளிய முறையில் கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு குறளைச் சொல்லி அதற்கான உரைநடை, சொற்பொருள், விளக்கம், கருத்துரை என்று மிக எளிய முறையில் விளக்கி இருக்கிறார் நன்னன். 90 வயதைத் தொட்ட புலவர் மா.நன்னன் கடலூர் […]

Read more

ஆடத்தெரியாத கடவுள்

ஆடத்தெரியாத கடவுள், நீதிபதி எஸ்.மகாராஜன், விகடன் பிரகரம், 757 அண்ணாசாலை, சென்னை – 2; விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-2.html   ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரைகள் மீது சுவாரி செய்து, சரியான இலக்கை அடைந்து வெற்றிக்கனியைப் பறித்து இருக்கிறார், நீதிபதி எஸ்.மகாராஜன். இலக்கியம், நீதி என்ற இரு வேறு துறைகளில் தனக்குள்ள புலமையை அருமையான கட்டுரைகளாக ஒருசேர வார்த்தெடுத்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளிலும் ஏராளமான இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி, தன்னை சிறந்த இலக்கியவா தியாகவும், […]

Read more

தென்னிந்திய சவுராஷ்ட்ர சமூக வரலாறு

கடலங்குடியின் மகாபாரதம், சசிரேகா, கடலங்குடி பதிப்பகம், 38, நடேச அய்யர் தெரு, தியாகராய நகர், சென்னை – 17; விலை ரூ. 80   மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை 168 பக்கங்களில் சுருக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மகாபாரதத்தை சுருக்கமாக அரிய இந்நூல் பெரிதும் உதவும்.   —   ஸ்ரீமாரியம்மனின் வரலாறு வழிபாடு அவதாரம், சு.சக்திவேல், வெளியிட்டோர்: எல்.தங்கவேலு, அயன்பொருவாய் (அஞ்சல்), பாலக்குறிச்சி (வழி), மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம், விலை ரூ.100   மாரியம்மன் வழிபாடுகளில் உள்ள பல முறைகள் சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளன. உடுக்கை […]

Read more

நெஞ்சமதில் நீயா

நெஞ்சமதில் நீயா, வாணிப்ரியா, சுபம் பதிப்பகம், 15, மணிகண்டன் ஐந்தாவது தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை – 21, விலை 130 ரூ. வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற பெண், தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுகிறாள், தான் சந்தித்த சவால்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறாள் என்று விளக்கும் நாவல்.   —   மனுமுறை கண்ட வாசகம், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், 1/3, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010, விலை 50 ரூ. ராமலிங்க சுவாமிகள் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம் […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 108, விலை 150 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-4.html சோழர்கள் ஆட்சி நடத்திய காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகும். தென்னிந்தியா முழுவதையும் சுமார் 300 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டனர். நாட்டில் அமைதி நிலவியது. கம்பர், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் சிறந்த நூல்களை எழுதி, தமிழை வளர்த்தனர். கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்த, சோழர் வரலாற்றை சிறப்புடன் எழுதியுள்ளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார். அவர் […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள், வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதி செய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் சேர்த்து மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனை பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

செவ்வியல் இலக்கிய மணிமாலை, ம.சா. அறிவுடைநம்பி, பக்கம் 320, கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8, விலை 160 ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள், தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி […]

Read more

கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம், பெ.கு. பொன்னம்பலநாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108, பக்கக்ம் 256, விலை 125 ரூ. அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்று வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் அவர் ஆழ்ந்து பயின்றிருக்கிறார். […]

Read more
1 828 829 830 831 832 841