தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ. விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.   —- கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. பாரதநாட்டின் […]

Read more

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள், சைதன்யா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்குவது கவிதை என்கிறார் சைதன்யா. உண்மைதான். கவிதைக்கு இறகு இல்லை என்று யார் சொன்னது என்று கேட்கிறார். நூறு கோடி நிறங்களில் பறந்து கொண்டிருப்பது வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்ல கவிதைகளும்தான். மனித நேயம் எங்கே இருக்கிறது? அது இல்லை என்பதைச் சொல்ல வரும் கோபத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியதி இல்லை. வழிகாட்டல் இல்லை. பெரியாரின் குரல் இடுக்கில் இக்கவிதைகள் சிக்கிக் கொண்டதே ஒரு படிமம்தானே. நன்றி: குமுதம், […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இது புதுமாரியான புதினம். இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் வதனா. இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இறுதியில் சென்று வா உறவே சென்று வா என்று காதலிக்கு விடை கொடுக்கும் தமிழமுதன் கண்ணீரோடு பிரிந்துவிடுகிறான். இந்தக் காதல் தொடரில் இலக்கியம், அறிவியல், பொதுவுடமை, தத்துவம், புராணம், வரலாறு என பல செய்திகளையும் கவிஞர் தியாரூ கலந்து கொடுத்திருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. காதலைப் பற்றி நிறைய கதைகள் வெளியாகி இருக்கலாம். […]

Read more

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ. […]

Read more

கருணாமூர்த்தி

கருணாமூர்த்தி, கவி. சுகரத்னம், கிரி டிரேடிங் ஏஜென்சி, சென்னை, விலை 75ரூ. காஞ்சி மகாப்பெரியவரின் வாழ்க்கை வரலாறு வசன கவிதையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் கவி. சுகரத்னம். விலை 75ரு. கிரி பதிப்பகத்தார் மேலும் சில ஆன்மிக நூல்களை வெளியிட்டுள்ளனர். விதியை வெல்லும் வழிமுறைகள் ஆசிரியர் சிவ.சிதம்பரம். விலை 20ரூ. இருள் நீக்கி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளிக்கும் சந்தேக விளக்கங்கள். தொகுத்தவர் ஆர். கரிகாலன். விலை 95ரூ. பிரார்த்தனா ஸங்க்ரஹம், நித்யா பாராயணத்துக்குரிய சின்னச் சின்ன சுலோகங்கள். மொழிபெயர்ப்பு கீதாராணி. விலை 50ரூ. ஸ்ரீ […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ. சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் […]

Read more

காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும்

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும், முனைவர் ஏ. லாரன்ஸ்மேரி, ரா.செ. துரைராஜ் நாடார் நூற்றாண்டு விழா குழு வெளியீடு, நாகர்கோவில், விலை 100ரூ. தமிழக எல்லைப் பகுதிகளை, தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு குறித்து பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்த நூலில் முனைவர் ஏ.லாரன்ஸ் மேரி ஆராய்ந்து எழுதியுள்ளார். பல நூல்களில் இருந்து குறிப்புகளைத் திரட்டியும், குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் செய்திகளைச் சேகரித்தும் எழுதப்பட்ட இந்த […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பூங்கொடி பதிப்பகம், விலை 140ரூ. நாட்டுப்பற்று, இந்துமதப்பற்று, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு ஆகிய பல கண்ணோட்டங்களில் பாரதியார் சமூக சீர்திருத்தத்தின் தேவைகளை வலியுறுத்தும் கருத்துக்களின் தொகுப்பு நூல். இந்தியாவில் விசேஷ கஷ்டங்கள் இரண்டு. 1. பணமில்லாதது, 2. சாதிக்குழப்பம். வறுமை எதிர்ப்புப் போராட்டமும், சாதி எதிர்ப்புப் போராட்டமும் இணைந்து நடந்தால்தான் சமத்துவம் ஏற்பட வழி பிறக்கும் என்றெல்லாம் பொருள் விரித்துக் கூறும் அளவிற்கு சூத்திரமாக அமைந்துள்ளது பாரதியாரின் இந்தக் கருத்து. சமூக சீர்திருத்தத்திற்காக பாரதியார் எழுப்பிய பல […]

Read more
1 116 117 118 119 120 223