நாடும் நலமும்

நாடும் நலமும், ஏ.எஸ். மாணிக்கம் அறக்கட்டளை, விலை 50ரூ. 600சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள சிறிய தீவு சிங்கப்பூர். குட்டித் தீவான சிங்கப்பூரின் விடுதலைக்கும், பின்னர் அதன் வளர்ச்சிக்கும், அந்த நாட்டு மக்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை வளம் மிகுந்த நலம் நிறைந்த நாடாக மாற்றிய பெருமை அந்த நாட்டின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட லீ குவான் யூவையே சாரும். அந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கையையும், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் இந்த நூலில் ஆசிரியர் அனகை மாணிக்க ஆறுமுகம் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி வகைகள், […]

Read more

உன்னை நீ மறந்தேன்?

உன்னை நீ மறந்தேன்?, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எனக்காக வாழ்வது தவறா? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் யார்? போன்ற கேள்விகளுக்கும், வாழ்க்கையின் சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்குமான விளக்கங்கள் இந்நூலில் விவரித்து கூறியுள்ளார் மனோதத்துவ நிபுணர் அ. கீதன். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய அய்யர், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 80 ரூ. திருவையாற்றில் 1855ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிறந்த ஜி. சுப்பிரமணிய அய்யர், சுதேசமித்திரன் பக்திரிகையை […]

Read more

நம்பிக்கை போதிமரம்

நம்பிக்கை போதிமரம், க. சிவராஜ், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 60ரூ. கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பில், விவேகானந்தர், ராமகிருஷ்ணர், புத்தர், நேரு, காமராசர் போன்ற சான்றோர்களின் அரிய கருத்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/8/2015. —- தொழிற்சாலையில் மின் நிர்வாகம் அடிப்படைகள், மு.முத்துவேலன், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம், கோயம்புத்தூர், விலை 450ரூ. தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் மின்சாரத்தை நன்றாக நிர்வாகம் செய்து, இழப்பை தடுத்து, மின்நிர்வாகத் திறனை மேலும் வளர்த்திக் கொள்ள இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு,டாக்டர் மா. இராசமாணிக்கனார்,  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010375.html தமிழகத்தை ஆண்ட மன்னர்களில், பல்லவ மன்னர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய பண்டைக்குலம், இன்னதென்று உறுதியாகக் கூறுவார் எவருமிலர். அவர்களது ஆட்சிக்காலத்தில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பல்லவ மன்னர்களின் இறைப்பணி அனைவராலும் இன்றளவும் பாராட்டப்படுகிறது. இறைப்பணி என்றாலே […]

Read more

சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ. சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு […]

Read more

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு, வெர்சோ பேஜஸ் வெளியீடு, புதுச்சேரி, விலை 200ரூ. 1979-ம் ஆண்டு புதுச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முடிவு செய்தார். இது அங்குள்ள மக்களின் உணர்வைக் கிளறி விட்டது. குடியரசு தினம் தொடங்கி 10 நாட்கள் புதுச்சேரி போராட்டக் கனமானது. இந்த நூலில், அந்த நிகழ்வுகளைப் பத்திரிகையாளர் பி.என்.எ ஸ். பாண்டியன் பதிவு செய்துள்ளார். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தோடு, புதுச்சேரியின் பிரதேச வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில் நடந்த பல்வேறு வெளிவராத சுவாரசியமான சம்பவங்களையும் அழகுற விவரிக்கிறார். […]

Read more
1 117 118 119 120 121 223