கலாம் ஒரு சரித்திரம்

கலாம் ஒரு சரித்திரம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 180ரூ. மக்களின் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், இளைஞர்களின் வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்ச, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. இன்னொரு மகாத்மாவாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் […]

Read more

தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை […]

Read more

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை […]

Read more

திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more
1 115 116 117 118 119 223