காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன், கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் வரலாற்றில் நடந்த அதிசய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது பின்னணியில் தான் திருமுறைகள் அமைந்துள்ளன. அந்த வகையில் திருமுறைகளில் உள்ள சில வரிகளை மட்டும் விளக்கி எப்படி திருமுறைகள் நால்வர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக அமைந்துள்ளன என்பதை இந்த நூலில் ராதா நடராஜன் அழகுற எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.‘

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், கருப்பேரி கே.வி.ஆர். கிருஷ்ணசாஸ்திரி, தென்றல் நிலையம், விலை 60ரூ. ஜாதகங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றிய நுட்பமான விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல, மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து டாக்டர் எஸ். ஜீவராஜன் எழுதிய சிறுகதைகள் கொண்ட புத்தகம். சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. பொதுவாகச் சொன்னால், எல்லா கதைகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றி: […]

Read more

சமணர் கோவில் சிறப்பு

சமணர் கோவில் சிறப்பு, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை வெளியீடு, விலை 140ரூ. காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. “கரந்தை” என்றும் “முனிகிரி” என்றும் அழைக்கப்படும் சமணர் கோவில். இதந் சிறப்புகள் பற்றி பேராசிரியர் எஸ்.பரதன் எழுதியுள்ள நூல். “அமவு புகழ் கரந்தை”. “தமிழ்நாட்டில் இதுவரை 535-க்கு மேற்பட்ட சமண சமயத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை சமணர்கள் படைத்துள்ளனர்” என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ. ஊழல் தேசியமயமாகி விட்டது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்கள் பற்றியும் ப. திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

வள்ளுவர்கள்

வள்ளுவர்கள், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 200ரூ. திருவள்ளுவர் பற்றிய வாய்மொழிக் கதைகளையும், குறள்களின் கருத்தமைப்பைக் கொண்ட பழமொழிகளையும், தற்காலக் கவிஞர்கள், திருக்குறளைக் கையாண்டு படைத்த கவிதைகளையும் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும், செண்பகம் வெளியீடு, விலை 120ரூ. உலகில் தோன்றிய மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூலில் விவரிக்கிறார், பேராசிரியர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன். […]

Read more

பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 200ரூ. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை கிடைக்காமல் இருக்கும் கேள்வி, வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, அவர்கள் பறக்கும் தட்டு மூலம் நமது உலகுக்கு வந்து செல்கிறார்களா என்பதுதான். உலகின் பல பகுதிகளிலும் பறக்கும் தட்டுக்களைப் பார்த்தவர்கள் கூறிய ஆச்சரியமான தகவல்கள், அவற்றுக்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கங்கள் ஆகியவற்றையும், வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அமெரிக்காவில் ரகசியமாக ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படும் ‘ஏரியா 51’ என்ற இடம் பற்றிய தகவல்களையும், சுவாரசியமாக தந்து இருக்கிறார், […]

Read more

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. மக்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி, “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் ‘புத்தகங்களாக வெளியிடும் பணியை வடகரை செல்வராஜ் செய்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புத்தகம், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள்”. இதில் சட்டப்போரவை நடைமுறைகள், சட்ட மன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் முதலிய விவரங்கள் அடங்கியுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் டெலிபோன் எண்களுடன் இடம் […]

Read more

கல்விச்செல்வம் தந்த காமராசர்

கல்விச்செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மீனாட்சி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாடு கல்வியில் முன்னேற அரும்பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஏறத்தாழ 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அது ஒரு பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் ஆகியவற்றுக்கு முன்னோடி. அரசியல் வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்தவர். “கிங்மேக்கர்” (அதாவது பல பிரதமர்களை உருவாக்கியவர்) என்று புகழ் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார், ஈசாந்திமங்கலம் முருகேசன். படிக்க வேண்டிய […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more
1 67 68 69 70 71 223