பகதூர்கான் திப்பு சுல்தான்

பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 120ரூ. இந்தியாவில் தனது அரசை ஸ்தாபிக்க விரும்பும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்கள், மைசூர் அரசின் மன்னர்கள் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும்தான். மராட்டியப் படைகளும், ஹைதராபாத் நிஜாம் படைகளும் ஆங்கிலப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டபோதும் திப்பு சுல்தான் சமரசமாகப் போகாமல், தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகிறான். திப்பு சுல்தானின் செயலின் விளைவுகள் இந்தியத்துவத்திலிருந்து விலகி மேனாட்டு நிலைக்கு உயர்வுடையதாக […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே […]

Read more

பால்ய வீதி

பால்ய வீதி, தெ.சு.கவுதமன், கவி ஆதவன் புத்தகக்கருவூலம், சென்னை, பக். 80, விலை 80ரூ. அன்றாட வாழ்வின் அனுபவத்திலிருந்து வாழ்வின் அர்த்தத்தை தன் கவிதைகள் வழி தேடுகிறார் கவுதமன். அப்படிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பால்யவீதி. இச்சமூகத்தின் மேல் காட்டும் கோபம் ஆத்திரம் ஆதங்கம் சோகம் எல்லாமே, இச்சமூக மாற்றத்திற்கான ஒரு பாங்காக்கிக்காட்ட முயல்கிறார். ஏதோ பொழுதுபோக்குக்காக கவிதை எழுதாமல், அடக்கமுடியாமல் போன அந்த முதல் மனிதன் அடங்கியிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடும் பல மூத்திரச் சந்துகள் என்று சமூகத்திற்கான மாற்றம் வேண்டிய எண்ணப்பதிவுகளாக நம் மனதிற்குள் […]

Read more

கபிலர்

கபிலர், ந.மு.வேங்கடசாமி நாடர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 144, விலை 70ரூ. உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் முன்னோர் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள அவாவுகின்றனர். நம் முன்னோராகிய தமிழ் மக்கள் பழைய நாளில் பல துறைகளிலும் எத்துணை மேன்மையுற்று விளங்கினார்கள் என்பதனை அக்காலத்தெழுந்த தமிழ் நூல்களினின்றும் தமிழ் மொழியின் திருந்திய நிலையினின்றும் அறிந்து கொள்ளலாகும். அதைக் கருத்தில் கொண்டே நல்லிசைப் புலவர்களைக் கொண்டு ஆராய்ச்சி முறையில் சிறந்த முறையில் எழுதவித்து, வெளியிடுவதை ஒரு சிறந்த கடனாக மேற்கொண்டுள்ளதாகவும் அந்த வரிசையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் […]

Read more

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ. உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, […]

Read more

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள்

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 336, விலை 375ரூ. நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது. நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து […]

Read more

செவ்விலக்கிய மதிப்புகள்

செவ்விலக்கிய மதிப்புகள், செ. ரவிசங்கர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 112, விலை 50ரூ. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர் அவர்களுள் ச.வே.சு.வும் ஒருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் ச.வே.சு. எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். தம் உரை நூலில் பல்வேறு இடங்களில் அவர் எடுத்துக் காட்டுகளை தமிழ் சார்ந்து பயன்படுத்தியுள்ள திறத்தை ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய உரை எடுத்துக்காட்டுத் திறன் என்ற இந்நூலின் முதல் கட்டுரை விளக்குகிறது. அகப்பாடலில் இருக்கும் சங்ககாலச் சூழலியல் கட்டுரையில் வாழிடச் சூழலியல், சுற்றுப்புறச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் போன்றவையும், தமிழர்களின் […]

Read more

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும், புரட்சியும் எதிர்புரட்சியும், இளவேனில், கார்க்கி பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சாதி ஏற்றத்தாழ்வு, மதவெறி, பெண் விடுதலை, தீவிரவாதம், ராணுவம், காவல்துறை, பாதல்சர்க்காரின் மூன்றாம் வகை நாடகம், பாப் இசை, நவீன ஓவியம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். கட்டுரைகளுக்கேயுரிய இறுக்கம் சிறிதுமின்றி, நூலாசிரியரின் உணர்வு வெள்ளம் வாசகர்களை இழுத்துச் செல்லும்வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் ஆசிரியர் முன் வைக்கும் கருத்துகள் மிகவும் […]

Read more
1 139 140 141 142 143 180