இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ. இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசிவாரியர், தமிழில் இரா. முருகவேள், நியூ ஸ்கீம் ரோடு, பக். 272, விலை 220ரூ. தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒருவரின் அனுபவப் பதிவுகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்திருக்கிறது. ஜனார்த்தனன் பிள்ளை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகத் தூக்கிலிடுபவராகப் பணியாற்றியிருக்கிறார். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் மொத்தம் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார் இவர் நாகர்கோவிலில் வாழ்ந்த தமிழர். திருவிதாங்கூரில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது போன்ற ஆச்சரியமளிக்கும் செய்திகளும் இந்நூலில் ஆங்காங்கே […]

Read more

ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், தொகுப்பு காந்திமதி கிருஷ்ணன், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 100ரூ. நம்பிக்கைதான் மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். அது மட்டும் இருக்குமானால் அவனால் எல்லாக் கஷ்டங்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் மிக மோசமானவற்றையும் ஊக்கத்தை இழந்துவிடாமல், மனமுடைந்து போகமல் எதிர்த்து நிற்க முடியும். அப்படிப்பட்டவன் கடைசிவரை ஆண்மையுடன் போரிடுவான். அமைதியான அசையாத மனமும் பிராணனும் உள்ள தன்மைக்கு சமதை என்று பொருள். பிராண இயக்கங்களான கோபம், அதீத உணர்ச்சி, செருக்கு, ஆசை முதலியவை மீது […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more

காந்திஜியும் தமிழர்களும்

காந்திஜியும் தமிழர்களும், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 16, விலை 10ரூ. காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டப் பயணத்தில் தங்கள் உழைப்பையும், உயிரையும் கொடுத்த தமிழர்களின் தமிழ்ப் போராளிகளின் பங்கு அளப்பரியது. இதில் முகம் தெரியாத எண்ணற்ற தமிழர்களும் அடங்குவர். சத்தியாகிரகத்திற்காக தன் உயிரைத் தந்த முதல் பெண் என்ற பெருமை வள்ளியம்மை எனும் 16 வயது இளம் தமிழ்ப் பெண்ணுக்கே உரியது. இந்தியத் திருமணச் சட்டங்களை எதிர்த்துப் போரிட்டதில் ஈடுபட்ட 16 பெண்களில் 10 பேர் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், ஆபிரகாம் பண்டிதர், நா. மம்மது, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 112, விலை 50ரூ. திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வாழ்ந்து இசைத் தமிழுக்கு தன்னிகரில்லா தொண்டாற்றி மறைந்த ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்த நூல். இசை, வேளாண்மை, ஜோதிடம், சித்த மருத்துவம், அச்சுத் தொழில் பல துறை வித்தகராக விளங்கிய ஆபிரகாம் எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷன் என்பதை நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார். இசை […]

Read more

விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு

விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு, மு. பரமசிவம், அருள் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-3.html தமிழ்ச் சிறுகதையிலும் புதினத்திலும் நடப்பியல் வாழ்க்கையைக் கற்பனைப் பாங்கோடு படைத்தவர் விந்தன். கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம் ஆகியன அவருடைய ஆறு நாவல்கள். நாவல்களைப் பற்றிய வினாக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விடையும் தெளிவும் அளிக்கும் வகையில் நாவல்களை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் அறிமுகப்படுத்தி ஆய்வு செய்துள்ளார் விந்தனுடன் நெருங்கிப் […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், தொகுப்பாசிரியர் என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், சென்னை, 2, பக். 368, விலை 350ரூ. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக இலக்கியத்தில் எழுந்த முதல் குரல் ஜெயகாந்தனுடையது. வணிகப் பத்திரிகைகளும் நல்ல படைப்பும் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். அவர் ஆனந்த விகடன் இதழில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய சிறுகதை, குறுநாவல், முழுநாவல் என கலந்து 17 கதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். வெளிவந்த காலத்தில் வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரளயம், […]

Read more

தமிழில் பில்கணீயம்,

தமிழில் பில்கணீயம், மணிக்கொடி எழுத்தாளர்கள் பாரதிதாசன், தொகுப்பும் பதிப்பும் – ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. வடமொழியிலிருந்து பல காவியங்கள், கதைகள், பல தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கும் இலக்கியப் படைப்புகளுள் ஒன்றுதான் பில்கணீயம். இச்சொல் பரவலாக அறியப்பட்டதற்குக் காரணம் பாரதிதாசன்தான் என்பர். பில்ஹணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட அவரது குறுங்காவியம்தான் புரட்சிக்கவி. ஆனால் இக்கதை பாரதிதாசனுக்கு முன்னும் பின்னும் பல இலக்கிய வடிவங்களில் வெளிவந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]

Read more

பச்சை விரல் பதிவு

பச்சை விரல் பதிவு, வில்சன் ஐசக், தமிழில் எஸ். ராமன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில், பக். 144, விலை 120ரூ. கேரள மாநிலத்தில் பிறந்தபோதிலும் இந்தியாவில் துயரம் நேர்ந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று தொண்டு செய்த பெண்மணி தயாபாய் (மேர்சி மாத்யூ) பற்றிய நூல். சுயசரிதை என்றாலும் அவரது களப்பணிகளின் பதிவுகள் மட்டுமே இடம்பெறுகிறது. பிகாரில் கோண்டு பழங்குடியினரிடையே சுமார் 14 ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வாழ்வின் மேம்பாட்டுக்காக சேவை புரிந்திருக்கிறார். அதிகார வர்க்கத்தின் மெத்தனப்போக்கு, ஆதிவாசிகளின் அறியாமை இரண்டுக்கும் பாலமாக இருப்பதைப் […]

Read more
1 140 141 142 143 144 180