ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 224, விலை 100ரூ. நூலின் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும் நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில் நூலாசிரியர் தம் எண்ணச் சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம். திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

நாளும் நாளும் நல்லாசிரியர்

நாளும் நாளும் நல்லாசிரியர், வெ. கணேசன், வி.கே. கார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 386+22, விலை 250ரூ. மேட்டுப்பாளையம் கல்லாறு என்ற இத்தில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் நிறுவிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் வெ. கணேசன் எழுதிய, From A Good Teacher to A Great Teacher என்ற ஆங்கில நூலினை தமிழைசிரியர் வி.கே. கார்த்திகேயம் மொழி பெயர்த்து, நாளும் நாளும் நல்லாசிரியர் என்ற தலைப்பில் தந்துள்ளார். ஆசிரியர்கள், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவதுடன், மாணவர்களையும் […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

திலக பாமா கவிதைகள்

திலக பாமா கவிதைகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 732, விலை 650ரூ. இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலக பாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால் சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்றி விலகி, ஒரு புதுப் பாதையை இவர் […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]

Read more

சிலம்பில் ஈடுபட்டது எப்படி

சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை […]

Read more

நுனிப்புல் மேய்தல்

நுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ. பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம். -சிவா.   —-   ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, […]

Read more

சங்க இலக்கியம் சில பார்வைகள்

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]

Read more
1 200 201 202 203 204 240