திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல், ந.ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 416, விலை 310ரூ. திருமுறைகளில் காணப்பெறும் ஞானத்தேனடையான கருத்துக்களை, 36 தலைப்புகளில் நூலாசிரியர் அழகுறத் தொகுத்து அளித்திருக்கிறார். கடமைகளை ஆற்றும் செயல், கடவுளைப் போற்றும் செயலாக உயர்ந்துவிடுகிறது என்ற கருத்தைக் கருமயோகத்தோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். மனிதப்பிறப்பில் வந்து போகும் நல்வினை, தீவினை பற்றிச் சிந்திக்கும் ஆசிரியர், இறை ஞானமே பிறவிப்பிணிக்கு மருந்தாகி பிறவித் துயரத்தை அகற்றும் என்று கருத்துரைக்கிறார். சிற்றின்பமும், பேரின்பமும் என்ற கட்டுரையில், இறையுணர்வு இன்பம் எப்படிப் பேரின்பமாக, அழியா […]

Read more

பாரதியின் இறுதிக்காலம்

பாரதியின் இறுதிக்காலம், ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. பாரதி இறப்பின் பின்னணி மகாகவி பாரதியின் இறுதிநாள் பற்றிய விவாதம் இன்னும் நிலவி வருகிறது. இதை ஆராய்ந்து முடிவு சொல்வது இந்த நூல். 42 பக்கங்களில் இதுபற்றி ஆராய்கிறார், நூலாசிரியர். தேடல் அனுபவம் மிக்க ஆசிரியர் அதோடு நில்லாமல், பாரதி எழுதிய காணக்கிடைக்காத, கோவில் யானை என்ற நாடகத்தையும் இந்த நூலில் இணைத்துள்ளார். இந்த நாடகம் 17 பக்கங்களைக் கொண்டுள்ளது. பாரதியின் இறுதிக்காலம் சிக்கல் நிறைந்தது. அவரைப் பற்றி அவருடைய […]

Read more

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

ஓடாத குதிரைகள்

ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 150ரூ. சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதி விருதுகள் பெற்றவரான பாரதி வசந்தன் எழுதியுள்ள கட்டுரைத் தொகுதி மக்கள் சமூகத்தின் மனசாட்சி. இலக்கியம், கலை, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருள்கள் பற்றிய 17 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல்கலைக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. சுதந்திரப் போரில் பங்கு கொண்ட நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ், மணிலாசனத்தில் அமர்ந்தபடி தேசபக்திப் பாடல்களை பாடிக்கொண்டே உயிர்நீத்த சம்பவத்தைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. மகாகவி பாரதியார் உயிர் நீத்தபோது […]

Read more

பரபரப்பான வழக்குகள்

பரபரப்பான வழக்குகள், தந்தி பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, அதில் பரபரப்பான வழக்குகள் என்ற தலைப்பில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த இதயத்தை உறைய வைத்த கொலை வழக்குகளும், மக்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கும் இடம் பெற்றன. இவை வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றன. இது இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் நூலாக வெளிவந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் அகில உலகையே அதிர்ச்சி அடையச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள், இதயவேந்தன் வாசகர் வட்டம், சென்னை, விலை 135ரூ. சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் முதலில் நாடக மேடையிலும் பிறகு வெள்ளித்திரையிலும் மாபெரும் சாதனை படைத்தது. அப்போது நடந்த விழாக்கள், தலைவர்களின் புகழாரங்கள், பத்திரிகை விமர்சனங்கள், சுவையான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சிறப்பாகத் தொகுத்து, இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ள எஸ்.கே. விஜயன் பாராட்டுக்கு உரியவர். நிறைய படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் படித்து ரசிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நேர்மைக்கு கிடைத்த […]

Read more

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், என்.டி. ராமகுமார், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்திருமேனி நர்மதை நதியிலிருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். வடநாட்டில் பல சிவாலயங்களில் இடம்பெற்றுள்ள லிங்கத் திருமேனிகள் இநத் நர்மதையிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கங்கள்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியரான என்.டி. ராமகுமார். நர்மதை நதியில் கிடைக்கும் எல்லாக் கூழாங்கற்களுமே சிவ லிங்கங்களாகக் கருதப்படுகின்றன. ஒங்காரரேஷ்வர் தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தாடிகுண்ட் என்னுமிடத்திலுள்ள ஆழமான பாறைக்கிணறுகளில் உயரத்திலிருந்து விழும் நர்மதை நதி நீர் வெள்ளத்தில் […]

Read more
1 4 5 6 7