விகடன் சுஜாதா மலர்

விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். […]

Read more

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுகன்யா பாலாஜி, அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ. மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு தொடங்கும் கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பக்கத்திற்கும் படிக்கத் தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் சுவாரசியமாக அமைந்துள்ளன. புதுமணத்தம்பதிகள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈ.கோ. பிரச்சினைகள், கதாபாத்திரங்கள் வடிவில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும் கதை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.   —-   சின்ன […]

Read more

மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, தமிழில்-ஜார்ஜினா குமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html பொறாமை, கோபம் இவற்றால் அன்பான உறவுகளுக்குள் ஏற்படும் போராட்டங்களைப் பற்றித் தலாய்லாமா, தன்னுடைய சொற்பொழிவுகளில் சொன்ன கருத்துக்களை அவருடன் பயணம் செய்த விக்டன்ச்சான் நூலாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு எங்கிருந்து தோன்றுகிறது? தவறுக்கு தண்டனைதான் சரியான தீர்வா? அதற்கான மாற்று வழி எது? மன்னிப்பின் மகத்துவத்தால் நிகழும் அற்புதங்கள் எவை? போன்றவை இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. […]

Read more

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை)

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை), கோக்கலை ஜே. ராஜன், மகராணி, சென்னை 101, பக். 496, விலை 250ரூ. தேரையர் என்பவர் தருமசௌமியர் என்பவருடைய மாணக்கர் என்றும் அகத்தியருடைய மாணக்கர் என்றும் கூறுவர். ஆனால் இவருடைய இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இவர் காலத்தில் நீங்காத தலைவலி கொண்ட ஓர் அரசனின் தலைவலியைப் போக்க, அவருடைய கபாலத்தைத் திறந்து பார்த்தபோது அங்கு ஒரு தேரை இருந்ததாம். உடனே ஒரு பாத்திரத்தில் நீரை வைத்ததும், தேரை அந்த நீரில் குதித்து நீங்கியதாம். பிறகு மூலிகையின் […]

Read more

தமிழ்க் காதல்

தமிழ்க் காதல், தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா பதிப்பகம், 60/6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக். 424, விலை 200ரூ. உலக இலக்கியங்களில் இல்லாத தனித்தன்மை தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு. அது, அகம் புறம் என்று வாழ்க்கையை வகுத்து, அவற்றுக்கு அணி செய்வதாக அமைந்த சங்க இலக்கியங்கள்தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் வாழ்வை விளக்குபவை சங்க இலக்கியங்கள். இவற்றில் அகத்திணை இலக்கியங்களை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வில் அகத்திணை என்று குறிப்பிடப்படும் காதல் வாழ்வு […]

Read more

காஞ்சி

காஞ்சி, ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியர் அறிஞர்கள், மு. நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு. காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், 96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 180ரூ. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதைச் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து, தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் பாதிரியார்கள் இறங்கினர். ஏட்டுச்சுவடிகளாய் அழிந்து […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.   —-   வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ. […]

Read more

வாக்ரிகளின் வாழ்வியல்

வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33,  முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ). தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, […]

Read more

வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more
1 266 267 268 269 270 336