தமிழ்நேயம்

தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ. கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு  செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். […]

Read more

சுவடிகள் வழங்கி கவிதைகள்

சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ. பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம்,இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-538-8.html கமலும், இரா. முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபத்திருக்கிறார்கள். கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா. முருகன் எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்தமுறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன்வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் (1889-1939) 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த்த […]

Read more

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை)

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), சித்திரக்கதையாக்கம் படம் – காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ (ஒவ்வொரு புத்தகமும்). படக்கதையில் விஞ்ஞானிகள் வெறும் கதைகளைவிட சித்திரக்கதைகள் மாணவர்களை அதிகம் கவரும். மேரிக்யூரி, ஆர்க்கிமிடிஸ், அலெக்சாந்தர் பிளமிங், லூயி பாஸ்டியர் ஆகிய விஞ்ஞானிகளின் வரலாறுகள், கண்கவரும் வண்ணப்படங்களுடன், சித்திரக்கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆர்ட் காகிதத்தில், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகங்கள் அமைந்துள்ளன. மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்.   […]

Read more

பாரதி திருநாள்

பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ. மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.   —-   சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது […]

Read more

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும்

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நூலை முனைவர் ம.இசக்கியப்பன் எழுதியுள்ளார். கவிஞர் ஒரு அறிமுகம், உருவகக் கொள்கை, கரு ஒரு பகுப்பு, மொழிப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் கவிஞரின் கவிதையாற்றலையும், மொழி ஆளுமையையும் அருமையான வகையில் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் கற்பனை, சொல்லாட்சி, அணிநயம், பழமொழியை ஆளும் திறன், ஓசை நயம் போன்றவை பரவிக் […]

Read more

அன்புசேர் வாழ்க்கையிலே

அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன், தமிழன் நிலையம், 5, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600014, பக். 368, விலை 150ரூ. காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் 3 காதல் ஜோடிகள் இடம்பெறுகின்றனர். காதலர்கள் கடற்கரை, ஹோட்டல், பேருந்துப் பயணம் என ஊர் சுற்றுவதையும், அவர்களின் எல்லை மீறல்களையும் குறிப்பிட்டுள்ள ஆசிரியரின் எழுத்துத்திறன், இப்புத்தகத்தைப் படிப்பவர்களைக் கிளுகிளுப்படையச் செய்யும். பெற்றோரின் அன்புக்கு மாறாக எதையும் செய்ய முடியாமல், 2 […]

Read more

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள்

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள், முனைவர் ந. வேலுசாமி, லியோ டால்ஸ்டாய் பதிப்பகம், சென்னை 10, பக். 344, விலை 250ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மையப்படுத்தி எத்தனை ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்து கொண்டே இருக்கலாம். திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள் என்ற இந்நூல் கவனிக்கத்தக்க படைப்பாகும். அன்னை, தந்தை, ஆசிரியன், குடிமகன், நண்பன், மனைவி, அமைச்சன், சான்றோன், நீதிபதி, ஆட்சியாளன் போன்றோர் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களைப்பற்றி திருவள்ளுவர் பல்வேறு பரிமாணங்களுடன் அணுகியிருப்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். திருவள்ளுவர் அன்னை பற்றிக் கூறிய கருத்துகள் […]

Read more

பெண்எழுத்து

பெண்எழுத்து, இரெ. மிதிலா, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 224, விலை 150ரூ. எழுத்துலகில் பெண்கள் எப்படி நுழைந்தனர்? அவர்கள் எழுத்துலகில் நுழைந்த காலகட்டத்தின் சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்பன போன்ற பல்வேறு நுட்பமான தகவல்கள் நிறைந்துள்ள நூல். பெண் எழுத்தாளர்கள் குறித்த ஆய்வாக இருந்தாலும், சமூகத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்களது முக்கியத்துவம் எனப் பல தகவல்களையும் நூல் உள்ளடக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிட்ட மதத்தினர் வந்த பிறகே பெண்கள் அதிகம் எழுதத் தொடங்கினர் என்பது போன்ற சில கருத்துகள் […]

Read more

சிவதரிசனம்

சிவதரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html மொகஞ்சதாரோ காலத்திலேயே (கி.மு. 3250) சிவ வழிபாடு இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்ற. காலத்தால் மூத்த மிகப் பழமையான சிவ வழிபாட்டின் அருமை பெருமையை சிவலிங்கத் தத்துவம், பைரவர் தத்துவம், கணேசர் தத்துவம், முருகன் தத்துவம், நடராஜர் தத்துவம், போலோநாத் தத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இடையிடையே வடமாநிலங்களில் உள்ள […]

Read more
1 291 292 293 294 295 336