சைவமும் தமிழும்

சைவமும் தமிழும், முனைவர் ரா. செல்வகணபதி, ஓம் நமச்சிவாய பிராத்தனைக் கோபுரம், பள்ளிக்கரணை, சென்னை 100, விலை 60ரூ. சைவ சமயத்தின் உயர்வையும், தமிழ் மொழியின் சிறப்பையும் நன்கு எடுத்துக்காட்டும் வகையிலும், அதே நேரம் மற்ற சமயங்களிலும் மொழிகளிலும் காணப்படாத அளவிற்கு, பல்வகை சிறப்புகளை சைவ சமயமும், தமிழ் மொழியும் பெற்றிருப்பதையும், அந்த சிறப்புகளின் அருமையையும், முனைவர் ரா.செல்வகணபதி எளிய, இனிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார். இதில் எக்காலத்திலும் பொலிவு குறையாத தமிழ் மொழியின் சிறப்புகளையும் என்றும் உயர்வளிக்கும் சைவ சமயத்தின் அளப்பிலா உயர்வுகளையும், […]

Read more

இலக்கிய உதயம்

இலக்கிய உதயம், பேராசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை, பூம்புகார் பதிப்பகம், பக். 464, விலை 250ரூ. இலக்கிய ஆராய்ச்சி ஆர்வலர்களுக்குக் கிடைத்த அறிவுக் களஞ்சியப் பேழையாக அமைந்துள்ள இந்நூல், எல்லாருக்கும் பயன்தரும் நல்ல நூல். எகிப்து, பாபிலோனியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம் ஆகிய பிற நாட்டு ஆதி இலக்கியங்களையும், நம் நாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள பெருந்துணையாய் அமைந்துள்ளது. வேதங்கள், புராணங்கள், பவுத்த இலக்கியங்கள் முதல் அனைத்தையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள இயல்கின்றது. இலக்கியங்களில் ஒப்பியல் ஒருமைப்பாட்டைக் காண்கிறார் நூலாசிரியர். மகாபாரதக் கதையை […]

Read more

திருக்குறள் நயவுரை

திருக்குறள் நயவுரை, திருக்குறள் பெட்டகம், தங்க பழமலை, அருள்மொழி வெளியீடு, திருக்கோவிலூர் 605 757, பக். 88, விலை 30ரூ. திருக்குறள் நயவுரை என்ற முதல் நூலில் குறட்பாவுக்கு உரை காணும்பொழுது, அவ்வுரைக்கு அரண் சேர்க்கும் வண்ணம் திருக்குறளுக்குள்ளேயே அமைந்துள்ள வேறு குறட்பாக்களைக் கருத்திற்கொள்வதும், நாம் கொள்ளும் உரையை உறுதிப்படுத்தும் வண்ணம் பிற புலவர் பெதுமக்களும், அருளாளர்களும் கூறிப்போந்துள்ள கருத்துகளை உளங்கொள்வதும் சிறப்பமைந்த உரைக்கு வழிகோலும் என்பதை மனதில் இறுத்தியே இவ்வுரையினை யான் எழுதியுள்ளேன் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பு உள்ளது. அடுத்து திருக்குறள் […]

Read more

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 3/643, குப்பம் சாலை, காவேரி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-0.html இந்நூலின் நாயகர், ஈ.வெ.ரா. பெரியாரின் அண்ணன் மகன். இவர் பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக்கூடியவராகவும் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் சில அரசியல் முடிவுகளில் முரண்பட்டு, அண்ணாதுரையுடன் இணைந்து தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள் (ஆசிரியர்:தி.கலியராஜன்; வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100) திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் […]

Read more

குறிஞ்சிச் சுவை

குறிஞ்சிச் சுவை, ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா, ஜமாலியா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும், கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more

ருத்ராட்சி

ருத்ராட்சி, கீர்த்தி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. சிவபெருமானின் திருச்சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சத்துக்கு பல மகிமைகள் உள்ளன. அதை அணிவதால் அற்புதமான பலன்களை அடையலாம் என்கிறார். நூலாசிரியர் கீர்த்தி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   திருக்குறள் சிறப்புரை, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. திருக்குறளுக்கு சிறப்புரை, விளக்கம், கருத்து அடைவு ஆகியவற்றை […]

Read more

மனச்சிறகுகள்

மனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ. கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் […]

Read more

கபிலர்

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சாம்ராட் […]

Read more
1 48 49 50 51 52 56