சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

காற்றோடு சில கனவுகள்

காற்றோடு சில கனவுகள், டாக்டர் ஷியாமளா, டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. 23 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கதையும் யதார்த்த வாழ்க்கையை வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் குடும்ப பெண்ணை சுற்றியே மற்ற பாத்திரங்கள் வலம் வருகின்றன. பொருத்தமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள், வர்ணணைகள் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக […]

Read more

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]

Read more

சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை ரூ. 360. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-179-5.html 39 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழந்து, இந்து சமயம் மற்றும் இந்திய கலாசாரம் பற்றி பல்வேறு இடங்களில் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி, உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஆதி முதல் அந்தம் வரை விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தூண்டதலால் அமெரிக்க பயணம் மேற்கொண்ட […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ். பதினெட்டா நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி […]

Read more

வரலாற்றில் ஒளைவை

வரலாற்றில் ஒளைவை, முனைவர் ஜோ.ஆர், இலட்சுமி, மதன்மோகினி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. தமிழகம் மறக்க இயலாத பெண்பாற் புலவர் அவ்வையார் ஆவார். ஆத்திசூடியிலிருந்து அசதிக் கோவை வரை பல நூல்கள் இயற்றியவர். அறம், மறம், ஆன்மிகம் என, பன்முகப் பார்வையுடன் அவ்வை நூல்கள் திகழ்கின்றன. இந்நூலில் அவ்வையார் குறித்த பல செய்திகள், சுவைபடக் கூறியுள்ள பாங்கைக் காண்கிறோம். அவ்வை என்ற சொல்லின் பொருளும், அவரின் நோன்பும், வழிபாடுகளும் அவர் குறித்த செவி வழிச் செய்திகளும், அவ்வையின் ஆதிக்கம், வரலாற்று நோக்கில் கூறப்படும் […]

Read more

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், டாக்டர் உ.வே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரை சாலை, பெசன்ட் நகர், சென்னை 600090, பக். 744, விலை 400ரூ. ஊர் தோறும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒப்புநோக்கித் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு தந்தவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர். தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றும் அளவிற்குச் சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான காப்பியங்களையும் பதிப்பித்தார். அந்த டாக்டர் உ.வே. சாமிநாதையருக்கு ஆசிரியர் என்னும் சிறப்பைப் […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ். காஞ்சி மாமுனிவர் வாழ்வை, நடந்த சம்பவங்களை, அதில் வந்த நிஜ பாத்திரங்களை நாடக வடிவில் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். இவைகளைப் படித்தால், எந்த அளவு அவர் பணத்தின் மீது சிறிதும் ஆசையின்றி, சிறந்த ஏழை பக்தர்களுக்கு உதவ காரணமாக இருந்தார் என்பதும், அவர் நிகழ்த்திய அருள் சம்பவங்களும் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. காஞ்சி முனிவரை நேசிக்கும் அனைவரும் இந்த நூலை விரும்பி ரசிப்பர்.   —-   […]

Read more

கடாஃபி வாழ்வும் வீழ்வும்

கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ. 40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.   —-   ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ. […]

Read more
1 37 38 39 40 41 46