அவமானம்

அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ. மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை […]

Read more

சங்கீத மும்மூர்த்திகள்

சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக். 80, விலை 75ரூ. இசையால், இறைவனை இசைய வைத்து, இறைவனை மட்டுமல்லாமல் கேட்பவர் அனைவரையும் அன்றும் இன்றும் என்றும் பரவசப்படுத்த முடிந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரது வாழ்க்கைச் சரிதங்களை எத்தனைபேர் எழுதி, எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. அந்த வகையில் இந்நூலாசிரியர், அவர்களது சரிதங்களை, மிக எளிய அழகான முறையில், அற்புதமாக எழுதியிருக்கிறார். இத்துடன் தியாகராஜ சுவாமிகளிடம் அபார […]

Read more

பலி கடாக்கள்

பலி கடாக்கள், அகில இந்திய மில்லி கவுன்சில், சென்னை, விலை 300ரூ. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் நம் நாட்டின் உளவுத்துறை, காவல்துறை ஆகியவை என்ன செய்து கெண்டிருக்கின்றன என்பதை விளக்கிடும் நூல். அரசு தான் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் நியாயப்படுத்திட தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்றது. இன்னும் ஒருபடி மேலேபோய் சட்டங்களை இயற்றிட தேவையான தீவிரவாத செயல்களை அரசே ஏற்பாடு செய்கின்றது. இதுபற்றிய பல்வேறு அறிக்கைகள், ஆவணங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான கைதுகள், […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, சந்திமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. நேர்மையும் நிர்வாகத்திறமையும் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் […]

Read more

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more

அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ், தொகுப்பு குமுதம் டீம், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-5.html ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. சோ, […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more
1 35 36 37 38 39 46