ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 285ரூ. தமிழ் சினிமாவுக்கு தனி சிறப்பு உண்டு. தலை சிறந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், கதை-வசன ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ஏராளமானவர்கள் தமிழ் சினிமாவின் பெருமையை வளர்த்திருக்கிறார்கள். அவர்களில் 99 கலைஞர்களின் வரலாற்றை இதில் சுவைபட எழுதியுள்ளார் எழுத்தாளர் பி.எல். ராஜேந்திரன். கலைஞர்களுடைய வரலாற்றைப் படிக்கும்போது, திரை உலகத்தின் வளர்ச்சியையும் அறிந்துகொள்கிறோம். நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.   —-   வேங்கையின் சபதம், ந. […]

Read more

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி, ச. அய்யாதுரை, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 104, விலை 80ரூ. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும். விபத்துகளாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ, பகையாலோ, தற்கொலையாலோ, மனிதன் மரணமடையக்வடாது. மரணத்தை ஏற்படுத்தும் மனிதன் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல். நீர், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், பிற உயிரினங்களால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள், பிற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள், மனிதன் தனக்குத் தானே […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 220ரூ. தமிழ்த் திரையுலகில், சாதனை படைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி. திருலோகசந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இயக்கிய படங்கள் 65. அதில் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் 25. “ஏவி.எம்.” பட நிறுவனத்தை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் “அன்பே வா”. அதை இயக்கியவர் திருலோகசந்தர். இவர் தயாரித்த “பத்ரகாளி” படத்தின் கதாநாயகி ராணி சந்திரா, படம் முடிவடைவதற்கு முன் விமான விபத்தில் இறந்து போனார். படத்தைக் கைவிட்டால், பல லட்சங்கள் நஷ்டம் […]

Read more

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம், ஏவி.எம். குமரன், டிஸ்கவரி புக் வேலஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. ஏவி.எம். மெய்யப்ப செட்டியாருக்கு அருகில் இருந்து தான் கற்றுக்கொண்ட பல அரிய பாடங்களை தொடர்புடைய அந்தந்த திரைப்படங்களோடும், தானே நேரடியாகப் பணியாற்றிய சில படங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஏவி.எம்.குமரன் பதிவு செய்துள்ள தொகுப்பு. ஏவி.எம். நிறுவனம் பல்வேறு மொழிகளில் தயாரித்த திரைப்படங்களின் உருவாகத்தின் ஆரம்பம் முதல் கடைசிநாள் படப்பிடிப்பு, அதன் வெளியீடு வரை எல்லா நிகழ்வுகளிலும், கூடவே இருந்த அப்போதைய சம்பவங்கள், கலைஞர்களுடன் […]

Read more

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம், டிஸ்கவரி புக் பாலஸ், சென்னை, விலை 200ரூ. தமிழ் சினிமாவை, உலகத்தரத்துக்கு உயர்த்தியவர்களில் முக்கியமானவர் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். பேனரில் முதல் படம் நாம் இருவர். காரைக்குடியில் சாதாரண நாடகக் கொட்டகையில் தயாரிக்கப்பட்டு, சாதனை படைத்தது. படம் சிறப்பாக அமைவதற்காக செலவைப்பற்றி கவலைப்படமாட்டார். பாட்டு, நடனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தநாள் படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன். படம் பாதிக்குமேல் எடுக்கப்பட்டபிறகு அதைப் பார்த்த ஏவி.எம்.முக்கு திருப்தி இல்லை. இதுவரை எடுத்ததை தூக்கிப் போட்டுவிட்டு, சிவாஜிகணேசனை கதாநாயகனாக […]

Read more

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், தீ. கார்த்தி, இயல்வாகை, பக். 128, விலை 100ரூ. உணவை மருந்தாக சாபபிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல். உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டிய வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழக்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more
1 18 19 20 21 22 30