முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 140, விலை 120ரூ. இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர், தமிழ் இலக்கியப் படைப்புப் பணிகளிலும், இலக்கிய வட்டப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே உருது, கொங்கணி, பஞ்சாபி, ஆங்கிலம், ஒரியா, ஜாவா, அஸ்ஸாமி, மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் பலர், வாழ்க்கை தரும் நெருக்கடிகளுக்கும், உறவுகள் தரும் ஏமாற்றங்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களின் கதைகளே இந்நூலில் […]

Read more

உயில் மற்றும் பிற கதைகள்

உயில் மற்றும் பிற கதைகள், ஓரியா, மூலம் ஜெ.பி. தாஸ், தமிழில் சுப்பிரபாரதிமணியன், சாகித்திய அகாதெமி வெளியீடு, பக். 256, விலை 160ரூ. கணவன் இருக்கும்போது சுகமில்லாமலும், சொற்ப வருடங்களில் கணவனை இழந்தும், புகுந்த வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவளின் வெற்றியை உயில் கதை சொல்கிறது. பொதுவாக நூலாசிரியர் என்பவர் ஒரு நாளைக்கு 50 பக்கங்கள் எழுத முடியும். நாடகாசிரியர் நாள் முழுவதும் சக நடிகர்களடன் ஒத்திகை செய்ய முடியும். ஆனால் கவிஞர் ஒரு நாள் முழுவதும் […]

Read more

மேடை நமதே

மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ. சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.   —- போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ. மத சார்பின்மை பற்றி புதிய […]

Read more

ரோஜா நிறச்சட்டை

ரோஜா நிறச்சட்டை, அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-0.html அன்றாடத்தின் கதைகள் ஆசிரியரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. புரியாத பிரச்சினை கதையில் இன்றைய தவிர்க்க முடியாத இருபாலர் கல்வி, தலைமுறை இடைவெளி போன்ற விவகாரங்கள் அலசப்படுகின்றன. மற்ற ஆடவருடன் யதார்த்தமாக மகள் பழகுவதைப் பார்த்து தந்தை பதறுகிறார். சந்தேகிக்கிறார். கடன் கொடுத்தவன் கலங்கும் விதம் சொல்கிறது இருபது ரூபாய் கதை. துக்கடா விஷயங்கள் என்று நாம் கருதுபவை, […]

Read more

கந்தபுராணக் கதைகள்

கந்தபுராணக் கதைகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ. சூரபத்மனை வதம் செய்ய முடிவு எடுக்கும் சுப்பிரமணியர், அவனிடம் வீரபாகு தேவரை தூது அனுப்புகிறார். சூரபத்மன் மிகக் கொடியவன். வீரபாகு தேவரை அலட்சியம் செய்கிறான். இறுதியில் சூரபத்மனை சுப்பிரமணியர் கொன்று, அவன் உடலின் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை வேலாகவும் ஏற்கிறார். இதை சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர் குஹப்பிரியன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- வலி தாங்கும் மூங்கில், ஞா. சந்திரன், பாவை வெளியீடு, சென்னை, விலை 70ரூ. வாழ்க்கையில் மனிதர்கள், […]

Read more

தேடி வந்த நன்றி

தேடி வந்த நன்றி, உடுமலை நன்னன், சிவா பதிப்பகம், திருப்பூர் மாவட்டம், விலை 100ரூ. அவள் தந்த பரிசு, கைதியின் மனைவி, செல்லப்பெண், கெட்டிக்காரி போன்று பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 26 கதைகள் இந்நூலில் உள்ளன. இந்த சிறுகதைகள் ஏற்கனவே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவையாகும். இந்த கதைகள், வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- விநாயகர், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 22ரூ. விநாயகர் […]

Read more

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், திருச்சி, விலை 500ரூ. லட்சத்திற்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். அவர்களில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களே இறுதித் தூதர் ஆவார். அவரின் வரவே இந்தப் பிரபஞ்சத்திற்குக் கிடைத்த மாபெரும் அருட்கொடை. அத்தகைய பெருமை பெற்ற பெருமானாரின் வரலாறு மிகப் புனிதமானது. முன்மாதிரியானது. நற்குணங்களின் தாயகம், நபிகள் நாயகம் என்று போற்றப்படும் நபிகளாரின் உயர்ந்த பண்புகளை, போதனைகளை, வியத்தகு சாதனைகளை விளக்கி 41 தலைப்புகளில் சான்றோர்கள் எழுதிய […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more
1 51 52 53 54 55 80