வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி

வேர்வையின் வெகுமதி, வெ. இறையன்பு, குமுதம் பதிப்பகம். தவத்தை விட வேலையே முக்தி தரும் உழைப்பை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி என்ற நூலை அண்மையில் படித்தேன். குமுதம் பப்ளிகேஷன், நூலை வெளியிட்டுள்ளது. உழைப்பின் பெருமையை, மகத்துவத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் போற்றுகிறது. புராணங்கள், வரலாறு, தற்கால நிகழ்வுகள் மூலம், உழைப்பின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்குகிறார். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால் அவர் வேலையின் விசுவாசி. அவரே 12 மணி நேரம் வேலை […]

Read more

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம். அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை […]

Read more

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், திருச்சி, விலை 500ரூ. லட்சத்திற்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். அவர்களில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களே இறுதித் தூதர் ஆவார். அவரின் வரவே இந்தப் பிரபஞ்சத்திற்குக் கிடைத்த மாபெரும் அருட்கொடை. அத்தகைய பெருமை பெற்ற பெருமானாரின் வரலாறு மிகப் புனிதமானது. முன்மாதிரியானது. நற்குணங்களின் தாயகம், நபிகள் நாயகம் என்று போற்றப்படும் நபிகளாரின் உயர்ந்த பண்புகளை, போதனைகளை, வியத்தகு சாதனைகளை விளக்கி 41 தலைப்புகளில் சான்றோர்கள் எழுதிய […]

Read more

சின்ன தூண்டில் பெரிய மீன்

சின்ன தூண்டில் பெரிய மீன், ஆப்பிள் பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-245-6.html வாழ்க்கையில் வெற்றி பெற அளவான வளங்களை வைத்து பெரிய வெற்றிகளைப் பெறுவது எப்படி என்பதை மைய கருத்தாக வைத்து நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் எழுதி உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி.   —- தேனருவி, மதுரை பாபாராஜ், வெளியிட்டவர்-பா. வசந்தா, சென்னை, விலை 60ரூ. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட 30க்கும் மேற்பட்ட […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

பாமரன் பார்வையில் கம்பர்

பாமரன் பார்வையில் கம்பர், அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 268, விலை 110ரூ. பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை. காக்கா பிடிக்கலாமா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா?, அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே, பெண்டாட்டி ஊருக்குப் […]

Read more

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html 1790ம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான், முதன்முதலாக, முல்லை பெரியாற்றில், அணை கட்டுவது குறித்து சிந்தித்தவர். அதையடுத்து, 1876-78ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம்தான், பிரிட்டிஷ்காரர்களை, முல்லை பெரியாறு அணை கட்டுவதை துரிதப்படுத்தியது என, ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். கடந்த 1807ம் ஆண்டு துவங்கி 1870ம் ஆண்டு வரை ஜேம்ஸ் கார்ட்வெல், […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more

சிந்தனைத் தூண்டில்

சிந்தனைத் தூண்டில், தஞ்சை ராமதாசு, வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன், தஞ்சாவூர், விலை 75ரூ. மாணவர்களின் எதிர்கால வாழ்வு வளம் பெறவும், மனிதநேயமும் அறிவாற்றலும் மிக்க இளைஞர்களை உருவாக்கிடவும் தூண்டுகோலாய் இருப்பதற்காக எழுதப்பட்ட நூலாகும். ரத்ததானம், கண்தானம் குறித்தும் வலியுறுத்தியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- கிழக்குப் பார்வை, நதி (எ) ப.ரா.ஜீவராஜ், திரைப்பட இயக்குனர், கல்லுப்பிள்ளையார் கோயில் தெரு, கருங்கல்பாளையம், ஈரோடு, விலை 100ரூ. சமுதாயத்தில் உள்ள பெண்ணியம், சாதி, மத வேறுபாடுகளை களைந்தெடுக்கும் வகையில் எழுதப்பட்ட கவிதைகள் […]

Read more
1 15 16 17 18 19 23