நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-4.html நீதிக்காகவும், நேர்மைக்காகவும், சுயஉரிமைக்காகக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வரும்போது நிமிர்ந்து நின்றால், அது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்ற உயர்ந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். சுவாமி விவேகானந்தர், இந்திராகாந்தி, லெனின், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நிமிர்ந்து நின்று சாதிக்க […]

Read more

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள், ம. லெனின், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 296, விலை 185ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-211-7.html மனிதமூளை ஓர் அற்புதமான இயந்திரம். அதை முறைப்படி கையாண்டால் யாராக இருந்தாலும் சாதனையின் சிகரத்தை அடைய முடியும் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மூளையை முறைப்படி கையாளுவதற்கு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 300 பயிற்சிகளும் சிறப்புக்குரியவை. அவற்றுடன் தொடர்புபடுத்தி கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளும், படங்களும் புத்தகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் வித்தியாசமாகச் […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ. புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.   —- தன்னம்பிக்கை ஒரு […]

Read more

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில்

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில், செ.மு. குபேந்திரன், கவிநிலவன் பதிப்பகம், தருமபுரி, பக். 80, விலை 40ரூ. கவிதைகளுக்குள் ஒரு புன்னகையை, ஒரு பூவை, ஒரு காதலை, ஒரு நட்பை, ஒரு கிராமத்தை, ஒரு பூகம்பத்தை ஒளித்து வைக்க முடியும் என்பதை உணர்த்தும் ஓர் எளிய கவிதைத் தொகுப்பு. தன் கிராமத்தின் சொர்க்கத்தைச் சொல்லி பட்டணத்தின் பவிசைச் சாடுவதும், தாய்மையின் அருமையை மனதில் பதித்துவிட்டுப் போவதும், சாதிக்கப் பிறந்தவனிடம் சாதியைக் கேட்டு தடைக்கல்லாய் இருக்கும் சமூக அவலத்திற்கு சவுக்கடி கொடுப்பதும் ஊர் புறத்தே உள்ள […]

Read more

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more

மனம் மகிழுங்கள்

மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பக். 196, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-8.html மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும். ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் […]

Read more

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள், என். கணேசன், கருத்துளை மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 33, விலை 110ரூ. நாகரீக உலகில் அர்த்தமுள்ள வாழவு வாழ நினைக்கும் மனிதனுக்கு அதற்கான வழிகள் தெரிவதில்லை. அந்த நிறைவாழ்வுக்கான பல்வேறு பாடங்களை சாதனை படைத்தவர்களின் வாழ்வியல் மேற்கோள்களுடன் தன்னகத்தே கொண்ட நூல் இது.   —-   அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும், எம்.ஆர். ஆனந்தவேல், ஸ்ரீஹனுமான் டாரட் எண் கணிதே ஜோதிட ஆய்வுமையம்,9, ராகவேந்திரா நகர், ஐ.ஓ.பி. காலனி, பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more
1 17 18 19 20 21 23