1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக […]

Read more

சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல். திருமாவளவன், தொகுப்பாசிரியர் பூவிழியன், கரிசல் பதிப்பகம், ஆர்62, 2வது நிழற்சாலை, த.நா.வீ.வா. குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 200ரூ. 2001ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சட்டசபையில் பேசிய உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் போன்றவை 240 பக்கங்களில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் குரலாய், போர்க்குரலாய் சட்டமன்றத்தில் நூலாசிரியர் தன் குரலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சட்டசபையில் நூலாசிரியர் கோபமாக […]

Read more

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, விக்டோரியா பதிப்பகம், 5, நவுரோஜி அப்பார்ட்மெண்ட், 60, பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, சென்னை 31, விலை 300ரூ. நகைச்சுவை நடிகர்களில் சிறப்பிடம் பெற்றவர் சந்திரபாபு. மேல் நாட்டு பாணியில் நடனம் ஆடுவார். சொந்தக்குரலில் பாடுவார். சிவாஜிகணேசனுக்கு அடுத்த சிறந்த நடிகர் நான்தான் என்று தைரியமாகக் கூறியவர். குறைந்த படங்களில்தான் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 1958ல் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்த சந்திரபாபு, அவள் மனதில் ஏற்கனவே வேறு ஒருவர் இடம் […]

Read more

தோழமைக் குரல்

தோழமைக் குரல், ஆளூர் ஷானவாஸ், கரிசல் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை 42, விலை 250ரூ. தொல். திருமாவளவன் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆற்றியிருக்கும் களப்பணிகளை விவரிக்கிறது இந்நூல். 1990களிலிருந்து அவருடைய உரைகள், அறிக்கைகள், தலையங்கம், கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்திருப்பது பதிவாகியிருக்கிறது.   —-   நமோ நாமம், கோவி. லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. குஜராத்தில் மோடியின் ஆட்சியில் வறுமை, பெண்களின் நிலை, மது விலக்கு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more

ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more

சீனத்தின் குரல்

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ. சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.   —- […]

Read more

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு. தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க […]

Read more

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ. தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது. ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, […]

Read more
1 33 34 35 36 37 44