முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்த புராணம் ஆகிய புராணங்களின் தொகுப்பு நூல். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த சிவபெருமான் புரிந்த திருவிளையாடல் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உண்டு. பக்தியுடன் பூஜிப்பவருக்கு எல்லா நற்குணங்களையும் வழங்கும் சிவனின் திருவிளையாடல்கள் பலவற்றின் தொகுப்பே சிவபுராணம். விநாயக புராணத்தில் விநாயகருடைய பிறப்பு, பூஜிக்க வேண்டிய முறைகள், மந்திரங்கள், அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய முறைகள் பற்றிய செய்திகள் […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், சீதைப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் நூல். இதற்கு முன் இதுபோன்ற நூல்கள் வந்திருக்கின்றன. அவை உரைநடையில் எழுதப்பட்டவை. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இந்த நூலை மரபுக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். எல்லோரும் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், அதே சமயத்தில் இலக்கியச் சிறப்புடனும் கவிதைகளை எழுதியிருப்பது கவிஞரின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன. மகாத்மா காந்தி, நேரு, சாக்ரடீஸ், பெரியார், அண்ணா, பாரதியார், கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், கண்ணதாசன் உள்பட 50 தலைவர்கள், சாதனையாளர்கள் […]

Read more

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை 12, விலை 90ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அவர் எந்தெந்த மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்? அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள்? அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதை நாடகவடிவில் மவுலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாக்கவி எழுதிய நூல். நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால் விறுவிறுப்பாகவும், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- தாயெனும், […]

Read more

தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ. வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற […]

Read more

விழித்திரு விடியல் விருது கொடுக்கும்

விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ. நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை […]

Read more

கவிதைகளின் கால்தடங்கள்

கவிதைகளின் கால்தடங்கள், அகநாழிகை பதிப்பகம், சென்னை. தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது. நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்திரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே […]

Read more

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ. யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது […]

Read more

சிந்தனைத் தூண்டில்

சிந்தனைத் தூண்டில், தஞ்சை ராமதாசு, வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன், தஞ்சாவூர், விலை 75ரூ. மாணவர்களின் எதிர்கால வாழ்வு வளம் பெறவும், மனிதநேயமும் அறிவாற்றலும் மிக்க இளைஞர்களை உருவாக்கிடவும் தூண்டுகோலாய் இருப்பதற்காக எழுதப்பட்ட நூலாகும். ரத்ததானம், கண்தானம் குறித்தும் வலியுறுத்தியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- கிழக்குப் பார்வை, நதி (எ) ப.ரா.ஜீவராஜ், திரைப்பட இயக்குனர், கல்லுப்பிள்ளையார் கோயில் தெரு, கருங்கல்பாளையம், ஈரோடு, விலை 100ரூ. சமுதாயத்தில் உள்ள பெண்ணியம், சாதி, மத வேறுபாடுகளை களைந்தெடுக்கும் வகையில் எழுதப்பட்ட கவிதைகள் […]

Read more
1 40 41 42 43 44 57