தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். வறட்சியைப் போக்கும் வழிகள், கங்கை-காவிரி இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளில் இந்திய கம்யூனிஸ்டு முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நதிநீர் இணைப்பை வலியுறுத்துகிறார். கங்கை காவிரி இணைப்பால் ஒரு கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி பிறக்கும். நாட்டின் ஒற்றுமையைம் ஒருமைப்பாடும் சிறக்கும் என்பதை ஆதாரத்துடன் […]

Read more

இளவேனில் கட்டுரைகள்

இளவேனில் கட்டுரைகள், கார்க்கி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. எழுத்தாளர் இளவேனில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, இளவேனில் எழுத்தில் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இளவேனில் எழுத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியையும், அமைதியான நதியையும் காணலாம். பாட்டாளிகளுக்காக பரிந்து பேசுவதையும், ஏழைகளுக்காக வரிந்து கட்டுவதையும் பார்க்கலாம். சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். பொதுவுடைமை கருத்துகளுக்குப் பொலிவு தேடுகிறார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.   —-   பெண்கள் திலகம் பாத்திமா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 35ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் […]

Read more

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ. கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த இந்நூலாசிரியர் கலைமாமணி எப்.சூசைமாணிக்கத்தின் வாழ்க்கை வரலாறு, ஒரு நாவலைப்போல் அமைந்துள்ள வியப்பளிக்கிறது. அவர் ஆசைப்பட்டு அமைத்த வாழ்க்கையுமல்ல. திறமைகளால் அமைந்த வாழ்க்கையும் அல்ல. தானே அமைந்த ஆசிரியர் வாழ்வை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டு வாந்தார். ஆனால் எதிர்கொண்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, விறுவிறுப்பானவை, திருப்பங்கள் நிறைந்தவை, திடுக்கிட வைப்பவை, சூழ்ச்சிகள் சூழ்ந்தவை, சுவையானவை. இந்த அனுபவங்களே அவரை தனித்துவம் பெற்ற வரலாற்று நாயகராக்கி இவ்வரலாற்றின் மையப்புள்ளியாய் திகழ்கிறார். உண்மைச் […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக். 512, விலை 217ரூ. நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர். வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், மதி நிலையம், சென்னை, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-2.html சோமபானம் என்பது எந்தவகை பானம்? சிந்துவெளி நாகரிகம், வேத காலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாச்சாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும், அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ் பேப்பர் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. வாழ்வில் ஒருமுறையாவது ஒரு கவிதையாவது ஒரு மனிதன் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் அசலான மனிதனாக அவன் அவனை உணரும் தருணம் வரும் என்பார் கவிஞர் கந்தர்வன். அவர் சொன்ன அந்த அபூர்வ கணங்களை, உன் மீதமர்ந்த பறவை என்ற தமது கவிதைத் தொகுப்பில் காட்சியாகவும் சாட்சியாகவும் மாற்றியுள்ளார் கவிஞர் பழநிபாரதி. முன்னுரை என்பது ஒரு கோபுரத்தின் நுழைவாயிலைப் போன்றது. அது வசீகரிக்க வேண்டும். பிரம்மாண்டத்தின் ஒரு துளி ருசியை […]

Read more

ஒரு சிறு தூறல்

ஒரு சிறு தூறல், வளவ. துரையன், தாரணி பதிப்பகம், சென்னை, பக். 72, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-241-8.html இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும் புதுப்பொலிவோடு சிறப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான். இதில் கவிதை விதிவிலக்கல்ல. காலத்திற்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு வெகுவாக மாறிப் போய்விடுகிறது. புளித்துப்போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும் இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். […]

Read more

முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், பரத்வாஜர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 296, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்தர் புராணம் ஆகிய மூன்று பெரும் கடவுளர்களின் புராணங்களை ஒரே நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். இதில் முதல் பகுதியாக வரும் சிவபுராணமானது, சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புராணச் சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இரண்டாவது பகுதியான விநாயர் புராணத்தில் புராணக் கதைகளைவிட விநாயகர் வழிபாடு குறித்த விளக்கங்களே மிகுதியாக உள்ளன. […]

Read more

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, ரகசியன், பொன்னி வெளியீடு, சென்னை, விலை 60ரூ. கனவுகள் சுமந்து வனம் திரிபவன் தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன. குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக்கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை. ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் […]

Read more
1 38 39 40 41 42 57