உழைப்பின் நிறம் கருப்பு

உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ. அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் […]

Read more

தலைப்பற்ற தாய்நிலம்

தலைப்பற்ற தாய்நிலம், மஞ்சுள வெடிவர்தன, தமிழில் ஃபஹீமா ஜஹான், எம். ரிஷான் ஷெரீப், நிகரி எழுநா வெளியீடு, சென்னை, விலை 50ரூ. கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து? என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன. இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் […]

Read more

மதுக்குவளை மலர்

மதுக்குவளை மலர், வே. பாபு, தக்கைப் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. சங்கக் கவிதைகளில் இருந்து தனித்திருத்தல் கவிதையில் இருந்துவந்த ஒரு வெளிப்பாடு. எமிலி டிக்கன்ஸன், ஸில்வியா ப்ளாத் போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் தங்களை படைப்புகளில் தனிமையை ஆதாரப் பொருளாக வெளிப்படுத்தினர். தொடக்க காலத் தமிழ் நவீனக் கவிதைகளிலும் இதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. வே. பாபுவின் மதுக்குவளை மலர் தொகுப்பையும் இதன் கீழ் வகைப்படுத்தலாம். 90களில் இருந்து எழுதிவருபவரான வே. பாபுவின் இம்மதுக்குவளை மலருக்கு ஆதாரமாக இருப்பதும் தனிமைதான். அது அம்முவின் இல்லாமை […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more

ஆயிரம் ஆண்டு ரகசியம்

ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் […]

Read more

நூறு வயது வாழவேண்டுமா?

நூறு வயது வாழவேண்டுமா?, திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. புரியாதவர்களுக்கு புதிராகத் தெரியும் சித்தர்கள், புரிந்தவர்களுக்கோ புதையலாகத் தெரிபவர்கள். மனித சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறை கொஞ்ச நஞ்சமல்ல. எது வாழ்க்கை என்பதையும், அதை எப்படி முறைப்படி வாழவேண்டும் என்பதையும் வகுத்துக் காட்டிய சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சைதை முரளி. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- எனை வெறுப்பவன் எனக்களித்த பரிசு, தமிழ்பிரியன்(எ) பெ.வை.மணிகண்டன், அறம் பதிப்பகம், புதுச்சேரி, விலை 65ரூ. காதலிக்கு காதல் வருவதற்காக சற்று […]

Read more

கரிசக் காடு

கரிசக் காடு, எஸ்.எஸ். போத்தையா, தொகுப்பும் பதிப்பும்- பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 188, விலை 140ரூ. கரிசல் மண்ணின் நாட்டுப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொலவடைகள், நம்பிக்கைகள், யுக்திக் கணக்குகள் எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுப்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் எஸ்.எஸ். போத்தையா. ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைத்தபோது, தனது நாட்டுப்புற இயல் சேகரிப்புப் பணிக்கு இடமாற்றம் தடையாக இருக்கும் என்பதால், பதவி உயர்வை வேண்டாம் […]

Read more

அன்பின் நடுநரம்பு

அன்பின் நடுநரம்பு, அகச்சேரன், தக்கை பதிப்பகம்,சேலம், விலை ரூ. 10 கவிதைகளாகும் மனிதர்கள் பராக்குப் பார்த்தல் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம். பெரும்பாலான இன்றைய நவீனத் தமிழ்க் கவிதைகள் பராக்குப் பார்த்தலை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். பராக்குப் பார்ப்பதற்கு வழியமைத்துத் தருபவை முக்கியமாகப் பேருந்துப் பயணங்கள்தாம். இம்மாதிரியான பயணங்கள் குறித்துத் தமிழ்க் கவிதைகளில் ஏற்கனவே பதிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது சமீபத்தில் வெளிவந்துள்ள அகச்சேரனின் அன்பின் நடுநரம்பு. விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் அகச்சேரனின் பேருந்துப் பயணங்களில் அவர் தன் முழு ஆளுமையையும், […]

Read more

இது நிகழாதிருந்திருக்கலாம்

இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ. ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் […]

Read more

மரங்கொத்திச் சிரிப்பு

மரங்கொத்திச் சிரிப்பு, ச. முத்துவேல், உயிர் எழுத்துப் பதிப்பகம், திருச்சி, விலை 60ரூ. நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டியிருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச. முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு […]

Read more
1 39 40 41 42 43 57