மதில்கள்

மதில்கள், வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். விடுதலையை விரும்பாத காதல் வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தில் எழுதி சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மதில்கள் நாவலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறுநாவலான மதில்கள் மலையாளத்தில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்த நாவல், பஷீரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எழுத்தாளரான அவர், அரசுக்கு எதிராக எழுதும் கருத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் இருக்கும் சிறைக்கு, அடுத்த அறையில் நாராயணி என்ற பெண் கைதி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அரும்பும் காதல்தான் […]

Read more

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை […]

Read more

வந்தேறிகள்

வந்தேறிகள், இரா. பாரதிநாதன், மதி நிலையம், பக். 376, விலை 325ரூ. நூற்றாண்டு கடந்தாலும் தொடரும் சமூக வலிகள் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின் படப்பிடிப்பு இந்த நாவல். நூல் ஓட்டம் சினிமா திரைக்கதை போலவே செல்கிறது. நூலாசிரியர், தானும் ஒரு அங்கமாக இருந்த கூட்டத்தின், அவலங்களின் உண்மை பின்னணியில் படைக்கப்பட்டது. உள்ளூர் முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பயந்து, புலம்பெயர்ந்து, வயிற்று பிழைப்புக்காக வேற்று முதலாளியிடம் அடிமையாகி, காலமெல்லாம் உழல்கிறது அப்பாவி தொழிலாளர் வர்க்கம். […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

அன்பு நபியின் அமுத வாக்குகள்

அன்பு நபியின் அமுத வாக்குகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 240ரூ. ‘திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ என்று திருமறை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் பொன் மொழிகளை, மொழிகின்ற நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிஞர் மவுலானா முகம்மத் பாரூக் கான், நபி மொழிகளைத் தொகுத்து ‘கலாமெ நுபுவ்வத் என்ற பெயரில் அரபி மொழியில் ஆறு தொகுதிகளாக அளித்துள்ளார். அதில் ‘ஒழுக்கவியல்’ குறித்த பொன்மொழிகள் முதல் தொகுதியாக வெளிவந்துள்ளது. […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ. மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் […]

Read more

கண்ணதாசன் பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ. மாந்திரீக எதார்த்த நாவல் […]

Read more

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது, எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில் சி.சீனிவாசன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, பக். 760, விலை 550ரூ. இலக்கியத்துக்கான நோபல் பரிசை தனது ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காகப் பெற்றவர் எர்னெட் ஹெமிங்கே. அவருடைய குறிப்பிடத்தக்க இன்னொரு நாவல் இது. 1936 – 1939 இல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போர் நிகழும் காலத்தில் ஆண்களும், பெண்களும் சிந்திக்கும் முறை, நடந்துகொள்ளும் முறை ஆகியவை மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வெடி மருந்து நிபுணர் ராபர்ட் ஜோர்டான் […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 95ரூ. பிரபல எழுத்தாளர்களின், சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, அசாகமித்திரன், சூடாமணி ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன் தொகுதியில், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பொன்னகரம், சிற்பியின் நகரம், நாசகாரக்கும்பல், நினைவுப்பாதை, காஞ்சனை உள்பட 20 சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொகுதிகளின் விலை தலா ரூ.130. மற்ற தொகுதிகள் ஒவ்வொன்றின் விலை 95ரூ. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைப் […]

Read more
1 37 38 39 40 41 66