சகுனி

சகுனி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 410ரூ.‘ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-3.html சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ். மகாபாரத கதையில் […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நடிகர் சூர்யா பற்றிய வண்ணமயமான புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. படிப்பை முடித்ததும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் சூர்யா. கூச்ச சுபாவம் உடைய அவர் சினிமாவுக்கு வந்ததும், படிப்படியாக உயர்ந்து இப்போது சிகரத்தைத் தொட்டிருப்பதும் நம்பமுடியாத உண்மை. இதுபற்றிய விவரங்களுடன் ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது முதல் குழந்தை பிறந்தபோது வீடியோ படம் எடுத்தது முதலான நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்துள்ளார் சூர்யா. சூர்யா நடித்த […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more

சேகுவாராவின் பொலிவியன் டைரி

சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், கவிஞர் கா. வேழவேந்தன், சீதை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-0.html கவிதைக்கு என்று ஒரு உயிர் உண்டு சக்தி உண்டு, குணம் உண்டு, மணம் உண்டு இவை அனைத்தும் வேழவேந்தனின் இந்த கவிதைத் தொகுப்பில் உண்டு. தந்தை பெரியாரின் பகுத்தறிவையும், பேரறிஞர் அண்ணாவின் மனித நேயம், பாரதிதாசனின் இன உணர்வு, புத்தர், சாக்கரடீசு, கன்பூசியசு, அலெக்சாண்டர், மாநபியார், ஜி.யூ.போப், வள்ளலார், காந்தியடிகள், பெர்னாட்சா, அன்னை தெரசா, காமராசர், திரு.வி.க., […]

Read more

பொக்கிஷம்

பொக்கிஷம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-1.html ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பெயரளவில்தான் அதை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சொல்லிவைக்கிறார்கள். அதேபோன்று அரிசந்திர புராணம், நளவெண்பா, குசேலோபாக்கியானம், மணிமேகலை, சிவபுராணம், திருவாசகம் போன்ற பழந்தமிழ் புராணக் காப்பியங்களை எடுத்துப்படிக்க யாவரும் முன்வருவதில்லை. காரணம் நேரமின்மையும் அதன் கடுமையான நடையுமே. அத்தகைய இலக்கியங்களை அதன் சாரம் மாறாமல், எளிமையாக சுருக்கிச் சொல்லி விளங்க வைக்கும் முயற்சிதான் […]

Read more

பாரதியின் பார்வையில்

பாரதியின் பார்வையில், மு. ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-9.html மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக்கூடியது. பாரதி தான் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது எழுதியதை பாரதியின் பார்வையில் என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது எனலாம். ஆனால் எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை […]

Read more

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், திருச்சி, விலை 500ரூ. லட்சத்திற்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். அவர்களில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களே இறுதித் தூதர் ஆவார். அவரின் வரவே இந்தப் பிரபஞ்சத்திற்குக் கிடைத்த மாபெரும் அருட்கொடை. அத்தகைய பெருமை பெற்ற பெருமானாரின் வரலாறு மிகப் புனிதமானது. முன்மாதிரியானது. நற்குணங்களின் தாயகம், நபிகள் நாயகம் என்று போற்றப்படும் நபிகளாரின் உயர்ந்த பண்புகளை, போதனைகளை, வியத்தகு சாதனைகளை விளக்கி 41 தலைப்புகளில் சான்றோர்கள் எழுதிய […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html பெண்மையின் வெளிப்பாடுகள் சங்கக் காலம் முதல் பக்தி இலக்கியக் காலம் வரை தமிழ் கவிதையில் இயங்கிய நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளும், உரைகளும் கொண்ட தொகுப்பு இது. அஞ்சியத்தின் மகள் நாகையார், ஆதிமந்தியார் தொடங்கி ஆண்டாள் வரை கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சாதாரண வாசகர்களும் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வகையில் […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், இராஜாமணி, சாகித்ய அகாடமி, பக். 104, விலை 50ரூ. திருலோக சீதாராம் எனும் சித்த சாகரம் திருலோக சீதாரம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு, கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன் மூலமும், தன் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால் தம்முடைய கடைசி. 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன […]

Read more
1 640 641 642 643 644 841