இது யாருடைய வகுப்பறை?

இது யாருடைய வகுப்பறை?, ஆயிஷா ரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், பக். 248, விலை 150ரூ. கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என பல தளங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடிக் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா? எப்படியாவது வெற்றி என்ற இலக்கை நோக்கி, பிள்ளைகளை மந்தைகளாய் துரத்தும், பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இத்தகைய […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், தலைமுறை பதிப்பகம், சென்னை 32, பக். 160, விலை ரூ. 170 ஒரு பொருளை அதன் இயல்பான நிலையிலேயே விற்பனை செய்தால், விற்பனை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அந்தப் பொருளுக்குள் புதிய பண்பை, உள்ளடக்கத்தைச் சேர்த்து அதன் மதிப்பைக் கூட்டினால் அதை வெற்றிகரமான விற்பனை செய்து லாபமீட்ட முடியும் என்பதை விளக்கும் நூல். சாதாரணத் தேனை விட தும்பைத் தேனுக்கும், சூரியகாந்திப் பூத் தேனுக்கும், மாந்தேனுக்கும், ஏலக்காய்த் தேனுக்கும் மதிப்பு அதிகம் உள்ளதல்லவா? இவ்வாறு மதிப்பூக்கூட்டும் முறையில் […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழில்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 446, விலை 250ரூ. மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்திய டாக்டர் மரியா மாண்டிசோரி, இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம், அகமதாபாத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு The Absorbment Mind என்னும் நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு. அதன் தமிழாக்கமே இந்நூல். குழந்தையின் தனிப்பட்ட மன ஆற்றலை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியர் இல்லாமல், சாதாரணமாகக் கருதப்படும் எவ்விதக் கல்வித் துணைக் கருவிகளுமில்லாமல், பெரும்பாலும் கவனிப்பாரற்றும் தடை செய்யப்பட்டும் இருந்தாலும், […]

Read more

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள்

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள், கனினிகா மிஸ்ரா, தமிழில்-உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சியை மட்டுமே காண முடியும். இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதையில் முன்னேற்றம் என்பது மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியும் என்பது ஓரளவுக்கு உண்மை. காப்பீட்டுத் துறையில் முகவர்களாக வெற்றி கண்ட ஒன்பது பேர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் இது. காப்பீடு முகவர்களான […]

Read more

மணம் வீசும் மணிச்சொற்கள்

மணம் வீசும் மணிச்சொற்கள், நபிமொழித் தொகுப்பு, அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ்(இஸ்லாஹி), இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை 12, பக். 248, விலை 90ரூ. இஸ்லாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் உரைகல் ஒன்று இறை வேதம் குர்ஆன். மற்றொன்று முகம்மது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகும். அதன் அடிப்படையிலான நபி மொழித் தொகுப்பே மணம் வீசும் மணிச்சொள்கள் நூலாக அமைந்துள்ளது. நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் குர்ஆன் மூலமும், இஸ்லாமிய வரலாற்றில் இருந்தும் ஆசிரியர் தகவல்களைப் பதிவு […]

Read more

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி – புலவர் அடியன் மணிவாசகனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக், 116, விலை 90ரூ. தமிழ் மொழியின் தொன்மை, அதன் வளம் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை தமிழனும் தன் அடையாளமான தாய்த் தமிழில் பேசுகின்றானா? எழுதுகின்றனானா? இல்லையே என கோமும் கொள்கிறது. தமிழின் தமிழோடு வாழ்கிறானா என்பதே இப்புத்தகத்தின் உபதலைப்பு. 11 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் வள்ளலார் ஆராய்ந்த தமிழொளி என்ற 2வது அத்தியத்தில் தமிழ் எண்ணிக்கையளவில் […]

Read more

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை, 2, முதல் தளம், மிதேஷ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 380ரூ. யதார்த்தமில்லாத கவிஞன் இறந்தவன் ஆவான். யதார்த்தம் மட்டுமேயுள்ள கவிஞனும் இறந்தவன் ஆவான். அறிவுக்கப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கு மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாப்லோ நெரூடா. உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதக் கவிஞன் என்று பாராட்டுப் பெற்ற காலகட்டத்திலேயே, பகைவனுடனும் ஒத்துழைக்க விரும்பும் அமெரிக்க ஆதரவு திரிபுவாதி என்று […]

Read more

பாவலர் வரதராஜன் பாடல்கள்

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]

Read more

வண்டாடப் பூ மலர

வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. வண்டாடப் பூ மலர என்ற நூலின் தலைப்பே மிகவும் இலக்கிய நயமாகவும், உச்சரிக்கும்போது இனிமையாகவும் இருப்பதை உணர முடிகிறது. அதைப்போலவே நூலில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பது, மிகச் சிறப்பானதாக உள்ளது. சாமானியர்களின் வாய்மொழிப்பாடல்கள் எப்படி சங்க இலக்கியவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை முதல் கட்டுரையின் மூலம் ஆசிரியர் மிக நுணுக்கமாக, ஆதாரங்களோடு விளக்கியிருப்பது, அவரது நுட்பமான அறிவை வெளிப்படுத்துகிறது. […]

Read more
1 722 723 724 725 726 841