வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், கவிதைகள், அமிர்தம் சூர்யா, அன்னை ராஜராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, விலை 100ரூ. நீந்தும் சொற்கள் பழைய சோறென இருக்கும் என் வாழ்வுக்கு இன்னமும் அவள்தான் நினைவில் ஊறிய இழப்பின் மாவடு… இந்த கவிதை உருவாக்கும் மனச்சித்திரங்கள்தான் இக்கவிதையின் வெற்றி. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என்கிற இந்த கவிதைத் தொகுப்பில் கவிதைகளாக முழுமை அடைந்துள்ள ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களான கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுகின்றன. […]

Read more

இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், விற்பனை-வேத பிரகாசனம், 142, முதல்மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-624-3.html இன்றைய வாழ்க்கை என்பது ஏதோ ஒரு வேலை என்பதாக மாறிவிட்டது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான அடித்தட்டுக் குடும்பங்களை மேல் தட்டுக்கு உயர்த்தி இருக்கிறது.ஆனாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் இன்னொரு பக்கம் இருட்டானது. அதன் விளைவாக உருவானதே அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான பொருளாதார மந்த நிலை. அப்போது வேலை […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more

தமிழும் நானும் (பகுதி 5)

தமிழும் நானும் (பகுதி 5), ஜி. ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல், சமயம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய நான்கு ஆய்வுக் களங்களின் வழி, பல மாநாடுகளையும் நூல்களையும் வெளியிட்டவர் ஆசிரியர். ஒப்பீட்டு சமய ஆய்வில் அதிக ஈடுபாடு கொண்டவர். மலேசியிவில் மூன்றாவது முருகன் மாநாடு, தாய்லாந்து பாங்காக் நகரில் மகாசூரி பல்கலைக்கழகத்தில் தேரவாத பவுத்தர் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால் நான் கிறித்தவன். […]

Read more

பத்துப்பாட்டு-பொருளடைவு

பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ. உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் […]

Read more

வரப்பெற்றோம்

  வரப்பெற்றோம் கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், மூ. இராசாராம், குமரன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 100ரூ. கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள், வாதூலன், அல்லையன்ஸ், சென்னை 4, பக். 144, விலை 70ரூ. உங்கள் குழந்தைகளைப் படியுங்கள், ச. அசாப் அலி, தாமரைப் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை 98, பக். 88, விலை 65ரூ. ஈஸ்வரனின் சிறுகதைகள், தெ. ஈஸ்ரன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. சித்தர் பாடல்கள், தொகுப்பு-இரா.முருகன், சாகித்திய அகாதெமி, […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ. சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, […]

Read more

தொல்காப்பியர் காட்டும் குடும்பம்

தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ. தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம், பக். 382, விலை 300ரூ. ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து தயாரித்துள்ள நூல். திருநங்கைகள் பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல மேற்கோள்களுடன் கூடிய ஒரு சில கட்டுரைகள் இருக்கின்றன. சமூகப் பார்வையோடும் சில கட்டுரைகள். நல்ல முயற்சி. -ஜனகன்.   —-   கைகாட்டி, கணபதி அருணாசலம், ஜி. வேதகிரி, 32, கேசவப் பெருமாள் […]

Read more
1 721 722 723 724 725 841