மனதைத் திற அறிவு வரட்டும்

மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.   —-   சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]

Read more

ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்)

ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்), ஸ்ரீரங்கம் சடகோப முத்துஸ்ரீநிவாசன், செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 275ரூ வேதங்களை எழுதிய வியாசரால் பிரம்மசூத்திரம் நூல் அருளப்பட்டது. அதற்கு வடமொழி உரை எழுதினார் ராமானுஜர். அது ஸ்ரீ பாஷ்யம் என்ற புகழ்பெற்ற நூலாகும். வேதங்களில் பயிற்சி, வடமொழி இலக்கண நூல்களில் தேர்ச்சி, வேதம் சார்ந்த பிற மத கருத்துக்களை விளக்கும் நூல்களை படித்த அறிவு மூலமாகத்தான் ஸ்ரீ பாஷ்ம் நூலை முழுமைக கற்றுணர முடியும் என்ற நிலை […]

Read more

இனிய இலக்கியம்

இனிய இலக்கியம், டாட்ர். வெ. திருவேணி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை 5, விலை 80ரூ. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைவுகள், அங்கிருக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்கள், இந்த புத்தகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் பெருமைமிக்க சங்க நூல்கள், அற நூல்கள், பழைய காப்பியங்கள், தமிழிசை இசைக்கலை ஆகியவற்றையும் நயமாக எடுத்தக்கூறியுள்ள பாங்கு புத்தக பிரியர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.   —-   ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை […]

Read more

அறியப்படாததமிழகம்

அறியப்படாததமிழகம், தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.கே,பி, சாலை, நாகர்கோவில் 629001, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-049-2.html தமிழ்நாட்டில் திருமணத்தில் இருந்து கோவில் விழாக்கள் வரை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அதுபற்றி ஆராய்ந்து, பல சுவையான தகவல்களைக் கொடுத்துள்ளார், பேராசிரியர் தொ. பரமசிவன். தென்னை மரம் பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் எவ்வித குறிப்பும் இல்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுந்த எந்த பக்தி இலக்கியத்திலும், கோவில்களில் தேங்காய் உடைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. தமிழர் திருமணத்தில் […]

Read more

வேட்டைக்கத்தி

வேட்டைக்கத்தி, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html 4 மொழிபெயர்ப்புக் கதைகள் கொண்ட புத்தகம். அதில் 2 கதைகள் ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிறகு ஆங்கிலத்தில் இருந்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. பொதுவாக, மொழிபெயர்ப்பு கதைகள் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும். கலாச்சார வேறுபாட்டினால் அந்தக் கதைகள் நம் மனதைக் கவருவதில்லை. ஆனால் ச. ஆறுமுகத்தின் திறமையான மொழி […]

Read more

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி, சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-9.html பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர் என்று பொதுவாக பேச்சு அடிபடுகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விறுவிறுப்பான நாவல்போல் எழுதியுள்ளார் சேவியர். இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று அவர் சபதம் செய்த நிகழ்ச்சி வெளிநாட்டுப் […]

Read more

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப. உதயகுமாரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-3.html சுப. உதயகுமாரன் யார், கூடங்குளம் தொடங்கும்போதெல்லாம் அவர் எங்கே போனார்… இதுபோன்ற கேள்விகளை கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்பார்கள். எல்லாக் காலத்திலும் போராட்டம் நடத்தக்கூடியவராகத்தான் இருந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது. 1981 முதல் 87 வரை எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் சு.ப.உதயகுமாரன். ஒரு […]

Read more

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள், பதஞ்சலி, விடகன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 152, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-8.html நல்லது, கெட்டது எதுவென சரியாகத் தெரியாமல் தடுமாறி வாழும் மனிதகுலத்தார், நன்னெறியில் செல்ல, இறைவனே மனித வடிவில் தோன்றி, தான் வாழும் முறையாலும், உபதேசங்களாலும் நெறிப்படுத்தினான் என்று பெரியோர்கள் கூறுவர். இறை தத்துவத்தையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் பரப்பிய பல மகான்களின் வாழ்க்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். […]

Read more

சைவமும் தமிழும்

சைவமும் தமிழும், முனைவர் ரா. செல்வகணபதி, ஓம் நமச்சிவாய பிராத்தனைக் கோபுரம், பள்ளிக்கரணை, சென்னை 100, விலை 60ரூ. சைவ சமயத்தின் உயர்வையும், தமிழ் மொழியின் சிறப்பையும் நன்கு எடுத்துக்காட்டும் வகையிலும், அதே நேரம் மற்ற சமயங்களிலும் மொழிகளிலும் காணப்படாத அளவிற்கு, பல்வகை சிறப்புகளை சைவ சமயமும், தமிழ் மொழியும் பெற்றிருப்பதையும், அந்த சிறப்புகளின் அருமையையும், முனைவர் ரா.செல்வகணபதி எளிய, இனிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார். இதில் எக்காலத்திலும் பொலிவு குறையாத தமிழ் மொழியின் சிறப்புகளையும் என்றும் உயர்வளிக்கும் சைவ சமயத்தின் அளப்பிலா உயர்வுகளையும், […]

Read more

மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள், எ.எஸ்.யைர், பிரேமா பதிப்பகம், 58/1, ஆழ்வார்ப்பேட்டை தெரு, சென்னை 18, விலை 40ரூ. தன்னை அழித்துக்கொண்டு, தான் உருகி உலகத்திற்கு ஒளி வெள்ளத்தை தருவது மெழுகுவர்த்தி. அதன் தியாகத்திற்கு இணையாய் வாழ்ந்து, இந்த சமுதாயத்தின் மடமை இருளை விரட்ட தங்கள் தியாகச் செயல்களால் புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பற்றிய குறிப்புகளே மெழுகுவர்த்திகள் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சில தியாக மெழுகுவர்த்திகளான காந்தி, நேரு, காமராஜர், தெரசா, விவேகானந்தர், இந்திரா, ராஜிவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்வியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் ததும்ப தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், […]

Read more
1 777 778 779 780 781 841