யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

பொது அறிவுக் களஞ்சியம்

பொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ. பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ. பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை,  பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]

Read more
1 2 3 4