கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 140, விலை 100ரூ. ரஷ்யாவுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா இன்று என்ன நிலைமையில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் சுவைபட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித குலத்தின் நன்மைக்கு ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இருந்த ஆட்சியே ஓர் உதாரணம். அந்த அடித்தளத்தில் இருந்துதான் இன்று சோவியத் […]

Read more

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ. மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, சந்திமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. நேர்மையும் நிர்வாகத்திறமையும் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more

நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more

தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

உலகம்

உலகம், செ.ஏழுமலை, ராசகுணா பதிப்பகம், 913, ஈ, சாய் ஸ்டோன் அபார்ட்மெண்ட்ஸ், பஜார்ரோடு, ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை 91, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-3.html புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகளும் வரதட்சணை, வறுமை, காதல், குடும்பம், மாமியார்- மருமகள் சண்டை, பெண்மனம், திறமை போன்றவற்றை கதையின் கருவாக்கி அறத்தை நிலைநாட்டும்விதமாக அமைந்துள்ளன. கதை கூறியிருக்கும்விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.   —- கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், எஸ். ஜே. சிவசங்கர், […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபும் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98, விலை 70ரூ. அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடம் எளிமையாக அறிமுகப்படுத்தும்விதத்தில் எழுதப்பட்டிருககிறது இந்நூல். யூக்லிட்டில் ஆரம்பித்து ஸ்டீபன் ஹாக்கிங் வரை அறிவியல் வரலாற்றில் தடம் பதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: இந்தியாடுடே, 26/3/2014.   —- வண்டாடப் பூ மலர, பேரா. முனைவர் ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 125ரூ. ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். […]

Read more

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-4.html நீதிக்காகவும், நேர்மைக்காகவும், சுயஉரிமைக்காகக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வரும்போது நிமிர்ந்து நின்றால், அது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்ற உயர்ந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். சுவாமி விவேகானந்தர், இந்திராகாந்தி, லெனின், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நிமிர்ந்து நின்று சாதிக்க […]

Read more
1 19 20 21 22 23 26