சாமிநாதம்

சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ. தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் […]

Read more

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம், பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புத்தொளி பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 80ரூ. மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான இந்நூலாசிரியர், கல்வி, அரசியல், ஆன்மிகம், பேச்சு, எழுத்து, ஆய்வுத்திறன்… என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இந்நூலில் அரபுலகில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய முப்பெரும் மதங்களுக்கும் புராதான தொடர்புடைய நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தின் தொடக்க காலம் முதல், 13-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்துள்ளார். இந்நாட்டின் பிரசித்தி பெற்ற நகராகிய ஜெருஸலத்தில்தான், […]

Read more

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ. ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ. மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும். மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, […]

Read more

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ. பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது. இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. உலகின் முதல் (சமைத்த) உணவு எது? பாறையை அடுப்பாக பயன்படுத்தி சுட்டு எடுக்கப்பட்ட ரொட்டியாக இருக்கலாம். உணவுக்கு சுவை எப்போது வந்து சேர்ந்தது? சந்தேகமில்லாமல் உப்பை உணவில் சேர்த்த பின்புதான். இந்தியர்கள் உலகிற்கு நன்கொடையாக வழங்கிய உணவுப் பண்டங்கள் என்னென்னஈ பிற நாட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியர்கள் எந்த உணவுகளின் சுவைக்க அடிமையானார்கள்? என்பது போன்ற சுவையான உணவு வரலாற்றை பரிமாறுகிறது ‘உணவு சரித்திரம்’ நூல். மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள்தான் […]

Read more

பாலச்சந்திரனின் இறுதியுணவு

பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ. நம் காலத்தின் கவிதைகள் சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன. எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் […]

Read more

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ. மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. […]

Read more
1 3 4 5 6 7 9